search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரகதவல்லி கோவில்"

    • மரகதவல்லி கோவிலில் கற்கோவில் கட்டும் பணி தொடங்கியது.
    • இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள இருள்சிறை கிராமத்தில் மரகதவல்லி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கற்கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

    முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க புனித நீருடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பூமிபூஜை விழா நடந்தது. புனித நீரை கற்கோவில் கட்ட இருக்கும் இடத்தில் ஊற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    ×