search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "resume"

    • திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது.
    • கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது.

    உடுமலை:

    திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு-கோவை இன்டர்சிட்டி ெரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டதற்கு மாற்றாக இந்த ெரயிலை கோவை வரை நீட்டிப்பதாக அப்போது ெரயில்வே அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு மாறாக அந்த ெரயில் மதுரை வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ெரயிலை, இப்போது ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தற்போது பாம்பன் பாலமும், ராமேஸ்வரம் ெரயில்வே நிலையமும் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் செல்ல வேண்டிய ெரயில்கள் அனைத்தும், மண்டபம் மற்றும் ராமநாதபுரத்துடன் நிறுத்தப்படுகின்றன.

    கோவையிலிருந்து 1920 லிருந்தே தனுஷ்கோடிக்கு ெரயில் இயக்கப்பட்டு வந்தது. 1964ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த பின்பு அந்த ெரயில் கோவை- ராமேஸ்வரம் இரவு நேர ெரயிலாக இயக்கப்பட்டு வந்தது.மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, ராமே ஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களையும் இணைக்கும் வகையில் 90 ஆண்டுகளாக இயங்கி வந்தது.கோவையில் வாழும் பல லட்சம் தென் மாவட்ட மக்களுக்கும் பெரிதும் பயனளித்து வந்தது. அகல ெரயில் பாதைப்பணிக்காக நிறுத்தப்பட்ட அந்த ெரயிலை மீண்டும் இயக்கினால் கொங்கு மண்டலத்திலுள்ள பக்தர்கள், தென் மாவட்ட மக்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்குமென்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி, மனுப்போர் நடத்தி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகளும் கடிதம் மேல் கடிதம் அனுப்பி வருகின்றனர். இன்று வரையிலும் இதற்கான பரிந்துரை கூட அனுப்பப்படவில்லை.

    இந்நிலையில் மங்களூருவி லிருந்து ராமேஸ்வரத்துக்கு போத்தனூர் வழியாக வாரம் இரு முறை ெரயிலை இயக்க தெற்கு ரயில்வே பரிந்துரை அனுப்பியுள்ளது.அதையும் கோவை சந்திப்புக்கு வராமல், போத்தனூர் வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
    • இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதாலும், சாலை சிதிலமடைந்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கியது.

    இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு ரெயில் நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    வழக்கம்போல ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

    ரெயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடை ந்துள்ளன. மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சில நாள்களாக பலத்த மழை பெய்தபோதும் அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இனி முன்பு போல அங்கு தண்ணீர் தேங்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

    தற்போது சாலை நடுவில் கொஞ்சம் கசிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. மேலும் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் சாலை யில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே உள்ள சிறிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ள்ளாவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    அதையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும் என எதிர்பா ர்க்கிறோம். அதன்பின், வழக்கம்போல ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதரபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.  #JaganmohanReddy #Yatra 
    அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்குவதற்கு வீடு இல்லாத இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் புதுமுயற்சியால் அவருக்கு தற்போது வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. #SiliconValley #DavidCasarez
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள வளைகுடா பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு. இங்கு டேவிட் கசாரேஸ் என்ற இணையதள வடிவமைப்பாளர் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் தங்குவதற்கு இடம் இன்றி தனது காரிலேயே தங்கி வேலைவாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

    எங்கும் தேடியும் வேலை கிடைக்காத டேவிட், புதுமுயற்சியாக, சாலை சிக்னல்களில் தனது பயோடேட்டாவை பொறுத்திவிட்டு, அதில் ஒரு வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘வீடில்லாத நான் வெற்றிக்காக பசித்து இருக்கிறேன், எனது சுயவிவரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பதே அந்த வாசகம்.



    இதனைக் கண்ட ஜாஸ்மின் ஸ்கோய்ஃபீல்ட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு, இவருக்கு உதவ முடிந்தவர்கள் யாரேனும் இருந்தால் உதவுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவலாக பரவியது.

    டேவிட்டின் இந்த புதுவித முயற்சியால் அவருக்கு இப்போது வேலை வாய்ப்புகள் குவிந்துவருகிறது. வீடு இன்றி, வேலையின்றி தவித்த இணைய வடிவமைப்பாளர் டேவிட், தற்போது 200-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு எந்த வேலைக்கு போகலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்துள்ளார். #SiliconValley #DavidCasarez
    ×