search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்பாடு"

    • நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    மொஹரம் பண்டிகை யையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாள்களுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து போக்கு வரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சனி, ஞாயிறு வார விடுமுறை, மொஹரம் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்து றைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இதேபோல் சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி, திருவாரூா், மயிலாடு துறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 150 பஸ்களும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் நாளை ( வெள்ளி க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ( சனிக்கிழமை) இயக்கப்பட வுள்ளன.

    இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு செல்ல வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள் , பரிசோதகர்கள் ,பணியா ளர்கள், பயணிகள் வசதிக்காக பணி அமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    ×