search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress party"

    • காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனமுத்து தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், வட்டாரத் தலைவர் சுப்புராயலு, சமயநல்லூர் செந்தில் முன்னிலை வகித்தனர். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் மகேசுவரன் கொடியேற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முருகன், நாராயணன், முத்துமணி, வரிசை முகமது, முகமது இனியா, வீரபாண்டி, ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாநிலத் தலைவர் மகேசுவரன் மாலை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், மாவட்டத் தலைவர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.

    மாநில வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972-ம் ஆண்டு முதல் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து 3 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரை அழைத்து மாணவர் காங்கிரஸ் மாநாடு நடத்தியவர். அவரது 50 ஆண்டுகள் அரசியல் சேவையை பாராட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொது வாழ்க்கையில் பொன்விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொன்விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவை நடத்து வதற்கு விழா கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வக்கீல் ராமேஸ்வரன், ஓ. பி. சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் தனசிங் பாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க்குமார், கவிப்பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ்.மேற்கு மாவட்ட பொருளாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலுருமான எஸ்பி.முரளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி கலந்து கொண்டார். இதில் கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ், கிருஷ்ணகுமார், ருத்ரமூர்த்தி, சுந்தரி முருகேசன், சாகுல் அமீது, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உணவுப் பொருட்களான ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன்,மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார்.இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார், முருகதாஸ் ,செந்தில்குமார்,சுந்தரிமுருகேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கடலூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    மத்திய அரசின் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் திலகர் தலைமையில், நிர்வாகிகள் ரமேஷ், ரவிக்குமார், சீத்தாராமன், ராமச்சந்திரன், மணி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென்று மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து மறியல்.
    • ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்தும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அமலாக்க துறையை கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.மேலும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.
    • ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்டத்தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளபடி மத்திய அரசைக்கண்டித்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பாக வரும் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9, 14 ஆம் தேதிகளில் பிரசார விளக்க நடைபயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் மாநகர், மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம்.
    • போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    அறப்போராட்டத்தில், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார்,சத்தியமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் 39 பாராளுமன்ற தொகுதி தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகம் - புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (18-ந்தேதி) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி, டி.டி.வி.தினகரன் கட்சி, சீமான் கட்சிகளிடையே 5 முனை போட்டி நிலவுகிறது.

    கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனேயே அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கினர்.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் அ.தி.மு.க- பா.ஜனதா, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மட்டும் நேற்று பிரசாரம் செய்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



    தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமியும், மு.க.ஸ்டாலினும் வார்த்தைகளால் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.



    பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்திற்காக 6 முறை தமிழகம் வந்தார். பா.ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார்.

    இப்படி அகில இந்திய தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தாலும் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

    சுமார் ஒரு மாதமாக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். இந்த பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

    நாளை (17-ந்தேதி) எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.

    நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

    தேர்தலில் 5.99 கோடி வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 சதவீத ஓட்டுப்பதிவு என்கிற இலக்கை எட்டுவோம் என்று மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை பிரசாரம் முடிவடைந்தவுடன் தொகுதிகளில் தங்கியுள்ள வெளி ஆட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், இதை மீறி தங்கி இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

    ஓட்டுப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 160 கம்பெனி துணை ராணுவப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு கம்பெனியில் 100 பேர் வரை இருப்பார்கள். இதன்மூலம் 16 ஆயிரம் துணை ராணுவப் படையினர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசாரும், 20 கம்பெனி துணை ராணுவப்படையினரும் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். #LoksabhaElections2019 #pollcampaign #pollcampaignends #campaignendsinTN
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் வரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். #Congress #RahulGandhi

    சென்னை:

    காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விமான நிலையத்தில் இருந்து நேராக போயஸ் கார்டனில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரிக்கு சென்றார். அங்கு மாணவிகள் மத்தியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஜீன்ஸ்பேண்ட், டி-சர்ட்டுடன் இளமை தோற்றத்தில் வந்த ராகுல்காந்தி மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியுடன் உரையாடினார். “சேஞ்ச் மேக்கர்ஸ்” என்ற தலைப்பில் மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது:-

    இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் குறைந்த அளவிலேயே செலவிடுகிறது.

    நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். சவால்களை மேற்கொள்ளும் வகையில் கல்வி தரம் உயர வேண்டும்.

    வட இந்தியாவை விட தமிழ்நாடு உள்பட தென் இந்தியாவில் பெண்களை சிறப்பாக நடத்துகிறார்கள்.

    பெண்கள் இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியில் மாற்றம் கொண்டு வரப்படும். அது ஒரே வரியாக இருக்கும். அதுவும் குறைந்த வரியாக இருக்கும்.

    பா.ஜனதா கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நிரவ் மோடிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியது. அவர் எத்தனை பேருக்கு வேலை தந்தார். நிரவ் மோடி, விஜய் மல்லையா, முகுல் சோக்ஷி மக்கள் பணத்தை திருடி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    குறிப்பிட்ட சிலரை மட்டும் (ராபர்ட் வதேரா) விசாரணை வளையத்துக்கு கொண்டு வருவது ஏன்? யார் மீது வேண்டுமானாலும் விசாரணை நடத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது.

    அனில் அம்பானியின் நிறுவனம் விமானங்களை தயாரித்தது கிடையாது. எந்த அடிப்படையில் எச்.சி.எல். நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் மறுக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

    எனவே ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடியை விசாரிக்க வேண்டும்.

    காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் கொள்கை தவறாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாத தாக்குதல் குறைவாக இருந்தது.

    புல்வாமா தாக்குதலை தடுக்க அரசு தவறி விட்டது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் தான் நடத்தியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தாக்குதலை முன் கூட்டியே தடுக்காதது ஏன்?

    காஷ்மீர் இளைஞர்களை மற்ற இளைஞர்களுடன் பழக வைப்பதன் மூலம் பயங்கரவாதத்தை குறைக்க முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுயஉதவி குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.

    காஷ்மீரில் இந்திய பிரதமரை நேசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டாலும் காஷ்மீர் மக்களை நேசிக்கவும் வேண்டும்.

    பஞ்சாயத்து ராஜ் மூலம் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினோம். அங்கு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை தடுக்க முடியும்.

    நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தடையாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் நிர்வாகத்தில் தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

    எனது தாயார் சோனியா காந்தியிடம் இருந்து நான் அனைத்தும் கற்றுக் கொண்டேன்.

    காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒரு மாநில மக்கள் மற்ற மாநில மக்களை நினைத்து சண்டை போடக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi

    காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் உரையாற்றுகின்றனர். #CongressParliamentaryParty #ParliamentaryPartymeet
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் (நாளை) 13-ம் தேதியுடன் முடிவடைகிறது.



    மீண்டும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 17-வது மக்களவை கூட்டம் வரும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    ஒவ்வொரு மக்களவை காலம் முடியும் தருவாயில் எம்.பி.க்களுக்கு வழியனுப்பு விழாபோல் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது மரபாக உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressParliamentaryParty #ParliamentaryPartymeet
    ×