search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress party"

    • ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    ராகுல்காந்தி எம்.பி., தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக சத்யாகிரகப்போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்த சத்தியாகிரக போராட்டத்தில், காங்கிரஸ் மாநில செயலாளர் சித்திக், பல்லடம் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் கணேசன், செயற்குழு புண்ணியமூர்த்தி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ்,நரேஷ் குமார்,சுந்தரி முருகேசன், வேலுச்சாமி,சாகுல் அமீது,முருகன்,காதர் மற்றும் நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • மக்களுக்கான திட்டங்கள் எதையும் மோடி அரசு செயல்படுத்தவில்லை.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்றத்தில் எங்கள் தலைவர் ராகுல்காந்தியை நேருக்குநேராக எதிர்கொள்ள முடியாத பாரதீய ஜனதா அரசு, பழிவாங்கும் போக்கோடு அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து இருக்கிறது.

    சமீபத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட குமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை, மத்திய பாரதீய ஜனதா அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை கட்டுப்படுத்த நினைத்து, இப்படியொரு ஜனநாயகப் படுகொலையை மத்திய அரசு நிகழ்த்தி இருக்கிறது.

    கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்கான திட்டங்கள் எதையும் இந்த மோடி அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசாங்கத்தின் முக்கியத் துறைகளான நீதித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முன்பு இங்கே பிரிட்டிஷார் நடத்திய ஆட்சியைப் போல, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. மோடி அரசின் இந்த செயல்களால் மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு எதிராக எல்லோரும் திரும்பிக்கொண்டி ருக்கிறார்கள்.

    இதையெல்லாம் திசைத்திருப்பவே ராகுல்காந்தி மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது மோடி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், காங்கிரஸ் கட்சி இன்னும் இன்னும் எழுச்சி பெறும்.

    வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் தோல்வி இப்போதே உறுதியாகிவிட்டது. பா.ஜனதா கட்சியின் வீழ்ச்சி இப்போது தொடங்கிவிட்டது.

    இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தவறாகப் பயன்படுத்தி ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித்து இருக்கிறார்கள். இது பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்துக்கு மோடி அரசு விட்டுள்ள சவால்.

    இந்தியாவில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலையில் பா.ஜனதா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது, நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தானது.

    இதற்கு இந்திய மக்கள் தகுந்த பதிலடியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு தருவார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.
    • பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு.

    உடுமலை :

    பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது.

    இதனை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமையில் காங்கிரஸ் லோகநாதன், டி. கோவிந்தராஜ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கனகராஜ், குப்புசாமி, வெங்கடேசன், முத்துக்குமார் ,வெற்றிவேல் குமார் ,பிரசாந்த் உட்பட 70 பேர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூரில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் இ.பாரத் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ஜானிஜாவித் முன்னில வகித்தார்.

    மாவட்ட தலைவர் ச.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் முனி சாமி, சாந்தசீலன், மாவட்ட துணை தலைவர் வெங்கடே சன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் நெடுமாறன்,பாரி வள்ளல் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் கொத்தூர் மகேஷ் நன்றி கூறினார்.

    • பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டியளித்தார்.
    • கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    தேவேந்திர குல வேளாளர் மக்கள் 99 சதவீதம் பேர் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்திலிருந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு சலுகைகள் வேண்டாம், மரியாதை கிடைத்தால் போதும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோல்வியடைந்து, பண நாயகம் வெற்றி பெற்றுள்ளது.

    மக்களை அடைத்து வைத்து மது, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு ஜனநாயக படு கொலை செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026-ல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் காங்கிரசுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் வாக்குகள் இல்லை. திமுக, காங்கிரசை தூக்கிப்பிடித்து திரிகிறது.

    வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தான் ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். எல்லாவற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒதுக்குகின்றனர். இங்குள்ள மக்கள் காட்டுக்கருவேல மரம் வெட்டி கரிமூட்டம் போட்டுத்தான் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழக த்தில் தி.மு.க. அரசால் நல்லதும் நடக்கவில்லை, கெட்டதும் நடக்கவில்லை.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் குடி யிருப்பு பகுதியில் குடி நீரில் மலக்கழிவுகளை கலந்தவர்கள் யார் என்று அரசுக்கு தெரிந்தும் இதுவரை உண்மை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

    ஓட்டு வங்கி அரசிய லுக்காக தி.மு.க. அரசு இப்படி செயல்படுகிறது. ராமநாதபுரம் நகராட்சி இந்திரா நகர் பகுதியில் 800 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நகராட்சி மின் மயானம் அமைக்க முயற்சிக்கிறது. இதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் த.ம.மு.க. சார்பில் பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு மாநிலத் தலைவர் அழகிரி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

    இதன்படி பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்களாக செந்தில்குமார், சுந்தரிமுருகேசன், அமராவதியப்பன், நகர பொதுச்செயலாளர்களாக கிருஷ்ணகுமார்,உத்திரமூர்த்தி, நகர செயலாளர்களாக முருகன்,கனகராஜ்,சாகுல்அமீது, ராமச்சந்திரன், சபீர்முகமது,பண்ணாரி, நகர பொருளாளராக சுரேஷ், நகர ஆலோசகர்களாக ஏ.பி.முத்துசாமி, சதாசிவம்,அர்ச்சுணன், ப.சக்திவேல்,எம்.மணிராஜ் மற்றும் 18வார்டு கமிட்டி தலைவர்கள்,நகர செயற்குழு உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்ட நிர்வாகிகளை எனது பரிந்துரையை ஏற்று மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். பல்லடத்தில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் எஸ்.பி.ஐ.வங்கி மற்றும் எல்.ஐ.சி சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார தலைவர் கணேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, மணிராஜ், முருகன்,வேலுசாமி, நரேஷ், ராமசந்திரன், சாகுல், தமிழ்செல்வி,லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
    • காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகர செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

    நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது. முன்னதாக காந்தி உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

    • காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    காரைக்குடி

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 138-வது தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண விழாவினை முன்னிட்டு காரைக்குடி நகரில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது. விழாவில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கி நகர் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ராமசாமி, நகரச் செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், வர்த்தக காங்கிரஸ் நகர தலைவர் ஜெயபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அருணா, பாலா, சிவா, அழகேஷ், முத்து, மணி, புதுவயல் முகம்மது மீரா, கண்டனூர் குமார் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் நாச்சம்மை, விஜி, சூர்யா, பிரதீக்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடந்தது.
    • இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் அகில இந்திய அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தையொட்டி கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொம்மன்பட்டி, கணேசபுரம் ஆகிய கிராமங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அமைப்புசாரா மாவட்ட தலைவர் சோனமுத்து தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், வட்டாரத் தலைவர் சுப்புராயலு, சமயநல்லூர் செந்தில் முன்னிலை வகித்தனர். மதுரை வடக்கு மாவட்ட தலைவர் மணி வரவேற்றார். மாநிலத் தலைவர் மகேசுவரன் கொடியேற்றினர். மாவட்ட நிர்வாகிகள் முருகன், நாராயணன், முத்துமணி, வரிசை முகமது, முகமது இனியா, வீரபாண்டி, ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுநாள் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்திற்கு மாநிலத் தலைவர் மகேசுவரன் மாலை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், நடராஜன், மாவட்டத் தலைவர் சோனை முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு தஞ்சை ரயில் நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் படத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான நாஞ்சி கி. வரதராஜன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநகர நிர்வாகிகள் சீதாராமன், கரந்தை கண்ணன், ராஜு, செந்தில் சிவகுமார், மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் மணிவண்ணன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் பொன் நல்லதம்பி, மக்கள் நலப் பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், ஜெயராமன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாந்தா ராமதாஸ், மகிளா காங்கிரஸ் கலைச்செல்வி, சிறுபான்மை பிரிவு சாகுல் ஹமீது, செயல்வீரர் அருண் சுபாஷ், ரயில் வடிவேல், ஆசிரியர் முருகேசன், நாஞ்சி ராஜேந்திரன், ரவிக்குமார், அலுவலக நிர்வாகி மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.
    • காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனுக்கு பொன்விழா நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லையில் இன்று நடைபெற்றது.

    மாநில வக்கீல் அணி துணைத்தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் 1972-ம் ஆண்டு முதல் அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடர்ந்து 3 முறை எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் பணியாற்றி உள்ளார்.

    பெருந்தலைவர் காமராஜரை அழைத்து மாணவர் காங்கிரஸ் மாநாடு நடத்தியவர். அவரது 50 ஆண்டுகள் அரசியல் சேவையை பாராட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொது வாழ்க்கையில் பொன்விழா நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பொன்விழாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை அழைத்து ஜனவரி மாதம் இறுதியில் பொன் விழா நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவை நடத்து வதற்கு விழா கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வக்கீல் ராமேஸ்வரன், ஓ. பி. சி. பிரிவு மாநில துணைத் தலைவர் வக்கீல் காமராஜ், பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் தனசிங் பாண்டியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்க்குமார், கவிப்பாண்டியன், ஓ.பி.சி. பிரிவு டியூக் துரைராஜ், மண்டல தலைவர்கள் பி.வி.டி. ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ்.மேற்கு மாவட்ட பொருளாளரும் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலுருமான எஸ்பி.முரளிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×