பல்லடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறப்போராட்டம்

அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம்.போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள். 
போராட்டத்தில் பங்கேற்றவர்கள். 
Published on

பல்லடம் :

பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாக்கிரக அறப்போராட்டம் கொசவம்பாளையம் ரோட்டில் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அறப்போராட்டத்தில், மாநில செயலாளர் செல்வகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார்,சத்தியமூர்த்தி, செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com