search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை கூட்டம்

    • ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் ராகுல்காந்தியின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி கலந்து கொண்டார். இதில் கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்திக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மணிராஜ், கிருஷ்ணகுமார், ருத்ரமூர்த்தி, சுந்தரி முருகேசன், சாகுல் அமீது, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×