search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress leader"

    குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.



    பட்டேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்காக போராடிய ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை தவறாக தொட்டவரை நடிகை குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

    ஆனாலும் குஷ்பு வருத்தப்படாமல் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு சென்றார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடந்து சென்றும், வேனில் பயணித்தும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகை குஷ்பு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை பார்ப்பதற்காக பெருங்கூட்டம் திரண்டது. கூட்டத்தினர் மத்தியில் குஷ்பு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு ஆசாமி குஷ்புவை தவறான இடத்தில் தொட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த குஷ்பு பின்னால் திரும்பி அந்த வாலிபரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு குஷ்புவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #Kushboo

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை பிரசாரம் செய்கிறார்.
    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி 2-ம் கட்டமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 இடங்களில் நாளை (12-ந் தேதி) பிரசாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10 மணியளவில் பெங்களூரு வருகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு கிருஷ்ணகிரி ஆண்கள் கலைக் கல்லூரியில் இறங்குகிறார். தேவராஜ மஹால் அருகே அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சத்யா, தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வக்கீல் மணி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.

    பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சேலம் ஹோலிகிராஸ் கல்லூரியில் வந்திறங்குகிறார். தொடர்ந்து காரில் சேலம் ஊத்துமலை அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

    அங்கு சேலம் தி.மு.க. வேட்பாளர் பார்த்திபன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ், ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணி, விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தேனி செல்லும் அவர் புதிய பஸ் நிலையம் அருகே அணைஞ்சி விளக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட பலருக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்லும் அவர் திருப்பரங்குன்றம் மண்டேலாநகரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பேசுகிறார்.

    இதில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்தாகூர், நெல்லை தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம், தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், ராமநாதபுரம் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் உள்பட பலருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதையொட்டி காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbusecase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணை தொடங்கினர்.

    மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது பார் நாகராஜ் பல்வேறு வகைகளில் தங்களுக்கு உதவி செய்ததாக கூறி உள்ளார். மேலும், பேஸ்புக்கில் அவருடன் நட்பில் இருந்தவர்கள் எந்தெந்த வகைகளில் உதவி செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும், இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PollachiAbusecase #CBCID

    அயோத்தியில் ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    லக்னோ:

    அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கவுரவத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.

    இதற்காக அவர் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த்சின்கா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.



    பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஏற்கனவே இரு கட்சியினர், இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டனர். இதன் தொடர்ச்சியாக இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்திக்கிறார்கள்.

    ராகுல் காந்தியை நேரடியாக சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச இருப்பது இது முதல் முறையாகும்.

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைக்கின்றன.

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின் போது தெலுங்கானா தேர்தலில் இரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி இறுதி செய்யப்படும்.

    ராகுல் காந்தியை தொடர்ந்து சரத்பவார், பரூக் அப்துல்லா, வீரப்பமொய்லி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi

    சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். #Congress #AnandSharma #Sabarimala
    கொச்சி:

    கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநிலத்தில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு மாநில பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா நேற்று கொச்சி வந்தார். அப்போது அவரிடம் சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய-மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியால் எதுவும் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.

    சபரிமலை தீர்ப்பை மாநில காங்கிரசார் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் சர்மா, உள்ளூர் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுடன் மத உணர்வுகளை இணைத்து ஒரு சமநிலையை உறுதி செய்வதில் அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள் எனக்கூறினார். முன்னதாக சபரிமலை தீர்ப்பை வரவேற்றிருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, இதுவே இறுதியானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Congress #AnandSharma #Sabarimala 
    ரபேல் போர் விமான விவகார சர்ச்சையில், பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி போடுவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. #Rafale #Congress #AnandSharma #Modi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான பேரத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) இந்தியாவில் 108 போர் விமானங்களை தயாரிப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்டது.

    ஆனால், பா.ஜனதா ஆட்சியில், எச்.ஏ.எல்.-ஐ விலக்கி விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர். பிரான்ஸ் அரசோ அல்லது விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேசன் நிறுவனமோ, எச்.ஏ.எல்.-ஐ ஒதுக்கச் சொன்னார்களா?



    யாருக்குமே தெரியாமல், இந்த மாற்றத்தை செய்துள்ளனர். இந்திய விமானப்படையையோ, ராணுவ மந்திரியையோ கலந்து பேசாமல், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்பதைக்கூட அருண் ஜெட்லியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு, மார்ச் 28-ந் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

    மேலும், விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ராணுவ மந்திரியோ, நிதி மந்திரியோ சொல்லத் தேவையில்லை. பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் அவர் மவுனம் காக்கிறார். அவர் தப்ப முடியாது.

    நூற்றாண்டு கால மிகப்பெரிய ஊழல், ரபேல் போர் விமான ஊழல் ஆகும். இந்த ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும்.

    பிரதமரின் பொய்களை மூடி மறைப்பதற்காக, எச்.ஏ.எல். நிறுவனம் போர் விமானம் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தை இழிவுபடுத்தி விட்டார். இந்த விமானங்களை தயாரிக்கும் திறன் பெற்ற ஒரே நிறுவனம், எச்.ஏ.எல். மட்டுமே.

    இந்த விவகாரத்தில், அவர் மட்டுமின்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார்கள். இது, இந்த அரசின் இயல்பை காட்டுகிறது.

    இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார். #Rafale #Congress #AnandSharma #Modi

     
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் அனுமுதி பெறாமல் கூட்டம் திரட்டியதால் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று பந்த் நடந்தது.

    தமிழகத்தில் நடந்த பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து கட்சி சார்பில் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டம் போலீஸ் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் திருவல்லிக்கேணி போலீசார் போராட்டத்தை நடத்திய காங்கிரசார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    போலீஸ் அனுமதியின்றி திடீரென அரசியல் கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்திய திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 143, 188 மற்றும் சென்னை போலீஸ் சட்டப்பிரிவு 41 (6) ஆகிய மூன்று பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சுபத்சவ்ஜி அறிவித்துள்ளார். #BJP #RamKadam
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராம்கதம். சமீபத்தில் இவர் ஒரு விழாவில் பேசுகையில், “இளைஞர்களே... நீங்கள் காதலிக்கும் பெண் பற்றி சொல்லுங்கள். அந்த பெண்ணை கடத்தி வந்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன்” என்று அறிவித்தார். அதோடு தனது செல்போன் எண்ணையும் வெளியிட்டார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து ராம்கதம் எம்.எல்.ஏ. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான சுபத்சவ்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களை கடத்துவேன் என்று கூறிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்கதம் நாக்கை யார் வெட்டி துண்டிக்கிறார்களோ, அவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார். #BJP #RamKadam


    மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
    புதுடெல்லி:

    தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.



    இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    மேலும் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார்.   #Sophia #ManishTewari
    திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.



    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    ×