search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBCID Police"

    • அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.
    • விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை சரக பகுதியில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்ரகு விசாரணை நடத்தி வந்தார்.

    சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

    இந்நிலையில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ். சமர்ப்பித்த அறிக்கையின் அடிப் படையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக இன்ஸ் பெக்டர் உலக ராணி நியமி க்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அனைத்து கோப்புகளையும் பெற்றுக் கொண்டார்.

    குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பொன் ரகு, சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி உலக ராணியிடம் ஒப்படைத்தார். இதனை யடுத்து இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் குழு இன்று முதலே தொடங்கியது.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். #PollachiAbusecase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணை தொடங்கினர்.

    மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது பார் நாகராஜ் பல்வேறு வகைகளில் தங்களுக்கு உதவி செய்ததாக கூறி உள்ளார். மேலும், பேஸ்புக்கில் அவருடன் நட்பில் இருந்தவர்கள் எந்தெந்த வகைகளில் உதவி செய்தார்கள்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும், இவ்வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகி விட்டதால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும்படி தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #PollachiAbusecase #CBCID

    பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, பெண்களை தன் வலையில் வீழ்த்தியது குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். #PollachiAbuseCase #CBCID
    கோவை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இவ்வழக்கில் கைதான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 15-ந்தேதி கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசை ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் வேறு யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது

    போலீசாரின் கிடுக்கிபிடி கேள்விகளுக்கு முதலில் திருநாவுக்கரசு மழுப்பலாக பதில் அளித்தார். எனினும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2016-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்தேன். எனக்கு கல்லூரியில் நிறைய மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. வட்டித்தொழில் மூலம் என்னிடம் பணம் புரண்டது. இதனால் நண்பர்கள், தோழிகளுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன்.



    இதனால் மாணவிகள் என்னை நம்பினர். அப்போது அவர்களின் செல்போன் எண்ணை வாங்கி, நண்பர் சபரிராஜனிடம் கொடுத்தேன். அவர் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பெண்களை வலையில் வீழ்த்தி விடுவார். அவரிடம் மாட்டிக்கொண்ட பெண்களை காரில் சுற்றுலா செல்லலாம் என அழைப்பார்.

    இதை நம்பி அவருடன் வரும் பெண்களை ஆள் இல்லாத இடத்துக்கு அழைத்து வந்து, அவர் பாலியல் சீண்டல் செய்வார். இதை சதீஷ், திருநாவுக்கரசு ஆகியோர் மறைந்திருந்து வீடியோ எடுப்பார்கள். பின்னர் அதை காட்டி பெண்களை மிரட்டினோம். சில பெண்களை அனுபவித்தோம். சிலரிடம் பணம், நகை பறித்தோம்.

    இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அரசியல் பிரமுகர் உதவியுடன் போலீஸ் விசாரணையில் இருந்து தப்பினோம். என்றாலும் கடந்த மாதம் ஒரு மாணவி எங்கள் மீது கொடுத்த புகார் விஸ்வரூபம் எடுத்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.

    தனிப்படை போலீசார் என்னை தேடுவதாக போலீஸ் ஒருவர் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. உடனே நான் ஆந்திராவுக்கு தப்பி சென்று திருப்பதியில் பதுங்கி இருந்தேன். பயத்திலும் பாதுகாப்புக்கும் சமூக வலை தளங்களில் வீடியோ வெளியிட்டேன். இதில், புகார் கொடுத்த பெண்ணை நான் பார்த்ததே கிடையாது, வழக்கில் என்னை சிக்க வைக்க சதி நடப்பதாக கூறி வழக்கை திசை திருப்ப நினைத்தேன். ஆனால் போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    திருநாவுக்கரசின் போலீஸ் காவல் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இன்று காலையிலேயே அவரை கோவையில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி நாகராஜன் முன்பு ஆஜர்படுத்தினர்.

    திருநாவுக்கரசை நாளை (செவ்வாய்க்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #PollachiAbuseCase  #CBCID

    பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசாருக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவர்கள் பெயர், விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    புகார் தெரிவிக்க 94884-42993 என்ற எண்ணையும் தெரிவித்து இருந்தனர். இந்த எண் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலே ஏராளமான புகார்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வந்தது.

    இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறும்போது நேற்று தான் புகார் தெரிவிக்க செல்போன் எண் கொடுத்து இருந்தோம். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து விட்டது.

    அவர்கள் பாலியல் பலாத்கார கும்பல் மீது பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என்றனர். #PollachiAbuseCase #PollachiCase

    தமிழகத்தையே உலுக்கியிருக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வலையில் விழவைத்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து, பணம் பறித்து வார்த்தைகளால் சொல்ல முடியாத கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.

    இதுதொடர்பாக  சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.

    பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வரும் இந்த நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். #PollachiAbuseCase #PollachiAssaultCase #JusticeforWomen
    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இன்று தாக்கல் செய்தனர்
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்து நிர்மலாதேவி மற்றும் உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். நிர்மலா தேவி குரல் மாதிரி பரிசோதனை சென்னையில் நடத்தப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் பலமுறை மாவட்ட மற்றும் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஜாமீன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு, விருதுநகர் மாவட்ட கோர்ட்டுக்கு கெடு விதித்தது.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வந்த காட்சி.

    இந்த நிலையில் நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விருதுநகர் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரியிடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 1160 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையில் பேராசிரியை நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகிய 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம், விபசார தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் வழக்கின் தன்மை குறித்து முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. #NirmalaDevi #NirmalaDeviCase
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் 5 நாட்கள் நடத்திய சோதனை இன்றுடன் நிறைவு பெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஏற்கனவே தேசிய, மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வ‌ருகிறார்கள்.

    இதனிடையே சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 23-ந்தேதி தூத்துக்குடிக்கு வந்தனர்.

    துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். நேற்று 4-வது நாளாக போலீசாரின் கள ஆய்வு நடைபெற்றது. பொதுமக்கள் பேரணியாக சென்ற பகுதிகளில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் துணையோடு ஆய்வில் ஈடுபட்டார்கள்.


    கலவரத்தின் போது எரிக்கப்பட்டும், அடித்து சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் கிடந்த சுமார் 150 வாகனங்களை சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் அருகே தங்களது கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வைத்து உள்ளனர். இந்த வாகனங்களில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உதவியுடன் வாகனங்களின் விவரங்கள் கண்டறியப்பட்டன.

    அனைத்து வாகனங்களிலும் அதிநவீன கருவிகளின் துணையுடன் துல்லியமாக சோதனை செய்தனர். மாவட்ட போலீஸ் மோட்டார் பிரிவு மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த ஒவ்வொரு வாகனத்தின் பேட்டரியையும் கழற்றி ஆய்வு செய்த‌னர். குறிப்பாக கல்வீச்சில் சேதமடைந்த போலீஸ் வாகனங்களில் வெகுநேரம் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து சோதனையை இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் நிறைவு செய்தார்கள்.

    சோதனை நிறைவை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இரவு நேரத்தில் கண்காணிக்கும் பொருட்டு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. கண்ணாடி உடைக்கப்பட்டு இயங்கக்கூடிய நிலையில் உள்ள வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனங்களில் பாதுகாப்பு கருதி பேட்டரிகள் அகற்ற‌ப்பட்டன.

    இதனிடையே துப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கிகள் 5, எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் 5, கைத்துப்பாக்கிகள் 3 ஆகியவற்றை போலீசார் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    துப்பாக்கி சூட்டின்போது போலீசார் பயன்படுத்திய தோட்டாக்கள் இன்னும் ஒப்படைக்கப்படாத நிலையில் பொதுமக்களிடமும் சில தோட்டாக்கள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைக்கவேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் 5 வழக்குகளுக்கும் தலா ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் விவரங்களை பெறவும், துப்பாக்கிகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துப்பாக்கிகள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கலவரப்பகுதிகளில் ஆய்வு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தடயவியல் துறை கூடுதல் இயக்குனர் திருநாவுக்கரசர் தலைமையில் உதவி இயக்குனர்கள் விசாலாட்சி, மணிசேகர், வல்லுனர் சண்முகசுந்தரம், வெடிகுண்டு நிபுணர்கள் வாசுதேவன், பிள்ளை ஆகியோர் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர். துப்பாக்கி சூடு நடைபெற்ற கலெக்டர் அலுவலக பகுதியில் ஒரு குழுவினரும், திரேஸ்புரம், அண்ணாநகர் பகுதியில் மற்றொரு குழுவினரும், இதர பகுதியில் வேறு குழுவினரும் சோதனை நடத்தி வருகிறார்கள். மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் கார்கள் தீவைத்து எரிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு மெயின் ரோட்டிலும், இந்திய உணவுக்கழக குடோன் ரவுண்டானா பகுதியிலும் சோதனை நடத்தினர்.

    ஏற்கனவே நேற்று நடைபெற்ற சோதனையில் தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சுவரில் ஒரு தோட்டா துளைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அருகிலேயே இன்னொரு தோட்டாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தோட்டாக்களை இன்று போலீசார் சுவரில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பினார்கள். இதுவரை நடைபெற்ற ஆய்வில் துப்பாக்கி சூடு தொடர்பான முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் மற்றும் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டி.ஜி.பி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட 5 வழக்குகளுக்கான ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக அந்த ஆவணங்கள் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர்.

    இதற்கு குற்ற எண் 4 முதல் 8 வரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட கோர்ட்டிலும் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வர உள்ளார். இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.  #ThoothukudiShooting
    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

    இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் அமைதியாக போராட்டத்துக்கு திரண்டு சென்றவர்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துணை தாசில்தார் உத்தரவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி என்ன என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பின.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அரசு மருத்துவமனை பகுதி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த‌ சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை இன்று தொடங்கினார்கள். இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் நேரடி மேற்பார்வையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் நடத்துகின்றனர்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் இதற்காக பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கியுள்ளார்கள்.



    மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்கு விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக பெற்றனர்.

    துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, அதன் விசாரணை அதிகாரி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதிகொடுத்த அதிகாரிகள், துப்பாக்கி சூட்டின் போது பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளனர். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை நடைபெறவுள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியிருப்பது மற்ற போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting
    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி, துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் விசாரித்தனர்.



    நிர்மலாதேவி கூறிய தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சரண் அடைந்த அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் காமராஜர் பல்கலைக் கழகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதன்பிறகு விசாரணையில் தொய்வு நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi


    ×