search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "installation"

    • காங்கயம் சட்டமன்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
    • பாலின் அளவு வேறுபாடு வர ஆரம்பித்து விட்டது.

    வெள்ளகோவில் :

    தமிழகத்தில் பால் கொள்முதல் மையங்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.காங்கயம் சட்டமன்ற தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.ராஜ்குமார் மன்றாடியார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை புதூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 4 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு லாரி மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பால் கொள்முதல் மையத்தில் அளவுகோல் மற்றும் டிஜிட்டல் மீட்டர் மற்றும் எந்திரங்கள் பழுதடைந்த நிலையில் ஆவின் நிறுவனம் அவைகளை அகற்றி விட்டது. இதனால் இந்த சங்கத்தில் இருந்து லாரிகளில் அனுப்பும் பாலின் அளவு வேறுபாடு வர ஆரம்பித்து விட்டது.இதற்கு முன்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் பாலின் அளவு கொழுப்பு சத்து மற்றும் இதர சத்து ஆகியவை இங்கே தர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு வந்தது. தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    பால் குறைபாட்டை ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்துவதன் மூலம் எளிதில் சரி செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அனைத்திலும் ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படும் நிலையில் பாலின் அளவு மற்றும் குளிர் நிலை பற்றி செல்போன் மற்றும் கணினி மூலம் ஒரே நேரத்தில் அறிய வாய்ப்பு உள்ளது.

    மேலும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பால் விவரங்களை உடனடியாக ஆன்லைனில் தெரிந்து கொள்வதால் ஆவின் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலினை சரியாக வினியோகித்து மக்களுக்கு தேவையான பாலையும் கிடைக்க வழி செய்ய வாய்ப்பு உள்ளது.

    எனவே தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், குளிரூட்டும் நிலையங்கள், கிளை பால் கொள்முதல் மையங்கள் ஆகியவற்றில் உடனடியாக ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பொருத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அயோத்தியில் ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    லக்னோ:

    அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கவுரவத்தை அளிக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
    ×