search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி"

    • விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.
    • அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது.

    சூரத்:

    அயோத்தியில் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட்டு குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகவாதிகள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் இந்த விழாவுக்காக நாட்டின் முக்கிய ஜவுளி மையமான குஜராத்தின் சூரத் நகரில் சிறப்பு சேலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில், ராமர் மற்றும் அயோத்தி கோவிலின் படங்கள் அச்சிடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சேலையை தயாரித்த ஜவுளி தொழில் அதிபர் ராகேஷ் ஜெயின் அந்த சேலையை அங்குள்ள கோவிலுக்கு வழங்கினார். அதனை ஜவுளி துறை நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். அவர்கள் இந்த சேலை அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுபப்படும் என்றனர்.

    மேலும் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தி கோவிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் உலகம் முழுவதும் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாது என்பதால் நாங்கள் இங்கிருந்து சிறப்பு சேர்க்கும் வகையில் ராமர், அயோத்தி கோவில் படங்களுடன் சேலையை தயாரித்து வழங்கி உள்ளோம். இந்த சேலை சீதைக்கானது என்றனர்.

    மத்தியில் தற்போது நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன.

    இந்நிலையில்,  2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விஎச்பி தலைவர் சரத் சர்மா கூறியுள்ளதாவது:

    ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப் படுகிறது.  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருவறை சன்னதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். 

    ஜூன் 1-ம் தேதியை கருவறையின் முதல் கல் அங்கு நாட்டப்படும். ராமர் சிலை நிறுவப்படும் புனிதமான பகுதி சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. 

    உத்தர பிரதேச துணை முதல்வர், ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் ராமர் சிலை மீது விழும் வகையில் கோயில் கட்டப்பட்டு வருவதாக ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.



    ×