search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lord ram"

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்துள்ளது.
    • இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்து உள்ளது. அனைவரின் மனங்களில் ராமர் உள்ளார்.

    கடந்த 22-ம் தேதி மாலை நாடு முழுவதும் ராமஜோதி ஏற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடினர். அன்று நாட்டின் பலம் தெரிந்தது. கடவுள் ராமரின் ஆட்சி, நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது.

    பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படும் பலர், பெரிய மாற்றங்களைச் செய்ய அடிமட்டத்தில் இருந்து பணியாற்றியவர்கள்.

    பத்ம விருதுகள் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த விருது மக்களின் பத்மா ஆக மாறியுள்ளது. திறமையான விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருது மூலம் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. நமது இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற வெளிநாட்டினருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், தைவான், மெக்சிகோ மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் விருது பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக இருந்தது. இந்த அணிவகுப்பில் இருந்த பெண்கள் சக்தி குறித்து அனைவரும் பேசினர்.

    இன்றைய இந்தியாவில் நமது மகள்கள், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். நாடு முழுவதும் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியும் விரிவடைகிறது.

    இன்று நிறைய பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால், பலரின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளது. இவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
    • அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.

    அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.

    மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.

    கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல நிபுணர் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான விழா இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படும் என்று அயோத்தி ராமர் ஆலய நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் கருவறை புனித நீரால் சுத்தப்படுத்தப்பட்டு யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கடந்த வியாழக்கிழமை இரவு 51 அங்குல ஸ்ரீபால ராமர் சிலை கருவறை பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

    அந்த சிலைக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இறுதிக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை இறுதி யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.


    இதையடுத்து இன்று காலை அயோத்தி நகரம் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    விழாவுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.

    விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு மேல் அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.

    சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.

    கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.


    திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள். இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.

    ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.

    மதியம் 1 மணி வரை சுமார் ஒருமணி நேரம் கருவறை பூஜைகள் நடக்கின்றன.

    • 380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 161 அடி உயரம் கொண்டது.
    • 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் உள்ளன.

    கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    • ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
    • வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.

    இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.

    ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார். 

    மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.

    2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.

    • 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?
    • நான் சொல்வது சரியா அல்லது இல்லை?

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிதேந்திர அவாத் மகாராஸ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    கடவுள் ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?. நான் சொல்வது சரியா அல்லது தவறா? (மக்களை நோக்கி கேள்வி கேட்டார்.)

    மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அயோத்தி தீப உற்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
    • அப்போது பேசிய அவர், கடவுள் ராமரின் லட்சியங்களை பின்பற்றுவது அனைத்து இந்தியர்களின் கடமை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அயோத்தி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசியதாவது:

    பகவான் ராமரின் ஆளுமையை போற்றவும், உலகளவில் நமது அடையாளத்தை நிலைநாட்டவும் கர்த்வய பாதையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தீபாவளி வந்துள்ளது. ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    பிரயாக்ராஜ் நகரில் 51 அடி உயரத்தில் ராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.

    மத்தியில் தற்போது நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன.

    இந்நிலையில்,  2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த விஎச்பி தலைவர் சரத் சர்மா கூறியுள்ளதாவது:

    ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப் படுகிறது.  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருவறை சன்னதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். 

    ஜூன் 1-ம் தேதியை கருவறையின் முதல் கல் அங்கு நாட்டப்படும். ராமர் சிலை நிறுவப்படும் புனிதமான பகுதி சிவப்பு கற்களால் அலங்கரிக்கப்படுகிறது. 

    உத்தர பிரதேச துணை முதல்வர், ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, சூரிய உதயத்தின் முதல் கதிர்கள் ராமர் சிலை மீது விழும் வகையில் கோயில் கட்டப்பட்டு வருவதாக ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.



    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை வடிவம் என்று கூறியவர்கள் எனது மத பக்தியை விமர்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ஜோத்பூர்:

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



    மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதில், கடவுள் ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என தெரிவித்திருந்தேன்.

    அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என பதிலளித்தனர். அன்று அப்படி கூறியவர்கள், இப்போது மோடிக்கு இந்து மதத்தை பற்றி ஏதும் தெரியாது என விமர்சிக்கின்றனர்.

    ஆனால், எனக்கு இந்து மதம் தெரியுமா என்பதை ராஜஸ்தான் வாக்காளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.  #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான வெண்கலச் சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. #Worldstalleststatue #LordRam #Ayodhya
    லக்னோ:

    ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.

    எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.



    இதற்கிடையில், அயோத்தி நகரில் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    ராமர் கோவில் கட்டுவதற்காக 5 பிரபல கட்டுமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையை
    முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று இறுதி செய்துள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை (தகவல் ஒலிபரப்புத்துறை ) செயலாளர் அவ்னிஷ் அஸ்வதி இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த திட்டத்தின்படி, ராமர் கோவில் கட்டும் இடத்தில் சரயு நதிக்கரையில் சிலை எழுப்பும் பீடத்தின் உயரம் 50 மீட்டர்களாக இருக்கும். ராமரின் வெண்கலச் சிலை 151 மீட்டர், மற்றும் தலைக்குமேல் இருக்கும் வெண்கொற்றக் குடை 20 மீட்டர் உயரத்திலும் இந்த சிலை அமையும்.

    மேலும், ராமர் கோவில் அருகில் ராமாயணத்துடன் தொடர்புடைய மன்னர்களின் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதில் மனு என்ற மன்னரில் தொடங்கி அயோத்தி நகரின் முழு வரலாறும் சித்தரிக்கப்படும். விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்கான காரண விளக்கமும் இங்கு சித்திர வடிவில் சித்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Worldstalleststatue #LordRam #Ayodhya

    உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். #RamStatue #UP
    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி உலாவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் (தகவல்) அவானிஷ் அவாஸ்தி இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

    ‘‘ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீட்டர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீட்டரிலும், பீடம் 50 மீட்டரிலும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

    அத்துடன் பீடம் பகுதியில் மியூசியம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ‘‘இந்த வேலையை தொடங்குவதற்காக ஐந்து நிறுவனங்களை தேர்வு செய்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும். அத்துடன் மணல் உறுதி சோதனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார்.



    குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை மோடி திறந்து வைத்தார். இந்த சிலையை விட உயரமான சட்டசபை கட்ட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.   #RamStatue #UP
    ராமரின் மறு அவதாரம் தான் பிரதமர் நரேந்திர மோடி என உத்தரப்பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். #Modi #LordRam #SurendraSingh
    பாலிலா:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலிலா சட்டமன்றம் தொகுதி உறுப்பினர் சுரேந்தர் சிங் நேற்று  செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவரும் ராமர் மற்றும் லட்சுமனரின் மறு அவதாரம் என தெரிவித்தார். மேலும், மோடி, அமித் ஷா மற்றும் யோகி ஆத்தியநாத் ஆகியோர் இணைந்து ராம ராஜ்ஜிய கனவை நனவாக்குவார்கள் என அப்போது அவர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பநகை  என்றும் பெண்களின் மீதான குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம் பெற்றோர்கள் தான், பிள்ளைகளை வெளியே உலவ விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் குற்றம் நடைபெறாது என பல்வேறு சர்ச்சை கருத்துக்களை சுரேந்தர் சிங் முன்னர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #Modi #LordRam #SurendraSingh
    ×