என் மலர்
செய்திகள்

உலகிலேயே மிக உயரமான சிலை அயோத்தியில் ராமருக்கு எழுப்பப்படுகிறது
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் உலகின் மிக உயரமான வெண்கலச் சிலை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. #Worldstalleststatue #LordRam #Ayodhya
லக்னோ:
ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.
எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அயோத்தி நகரில் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் கட்டப்படவுள்ள பிரமாண்டமான கோவிலில் ராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் வெண்கலச் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராமர் கோவில் கட்டுவதற்காக 5 பிரபல கட்டுமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையை
முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று இறுதி செய்துள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை (தகவல் ஒலிபரப்புத்துறை ) செயலாளர் அவ்னிஷ் அஸ்வதி இன்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, ராமர் கோவில் கட்டும் இடத்தில் சரயு நதிக்கரையில் சிலை எழுப்பும் பீடத்தின் உயரம் 50 மீட்டர்களாக இருக்கும். ராமரின் வெண்கலச் சிலை 151 மீட்டர், மற்றும் தலைக்குமேல் இருக்கும் வெண்கொற்றக் குடை 20 மீட்டர் உயரத்திலும் இந்த சிலை அமையும்.
மேலும், ராமர் கோவில் அருகில் ராமாயணத்துடன் தொடர்புடைய மன்னர்களின் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதில் மனு என்ற மன்னரில் தொடங்கி அயோத்தி நகரின் முழு வரலாறும் சித்தரிக்கப்படும். விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்கான காரண விளக்கமும் இங்கு சித்திர வடிவில் சித்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Worldstalleststatue #LordRam #Ayodhya
ராமரின் ஜென்மபூமியாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் முன்பு எப்போதுமில்லாத வகையில் முனைப்பு காட்டி வருகின்றன. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது. இந்து மக்கள் பொறுமையிழந்து, கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.
எனவே, அவசர சட்டத்தின் மூலம் ராமர் கோவிலை கட்டுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை அதிகரித்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை பணிய வைப்பதற்காக அயோத்தி நகரில் இன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றுள்ள ‘தர்மசபா’ ஆலோசனை கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது.

ராமர் கோவில் கட்டுவதற்காக 5 பிரபல கட்டுமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திட்ட அறிக்கையை
முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று இறுதி செய்துள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை (தகவல் ஒலிபரப்புத்துறை ) செயலாளர் அவ்னிஷ் அஸ்வதி இன்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, ராமர் கோவில் கட்டும் இடத்தில் சரயு நதிக்கரையில் சிலை எழுப்பும் பீடத்தின் உயரம் 50 மீட்டர்களாக இருக்கும். ராமரின் வெண்கலச் சிலை 151 மீட்டர், மற்றும் தலைக்குமேல் இருக்கும் வெண்கொற்றக் குடை 20 மீட்டர் உயரத்திலும் இந்த சிலை அமையும்.
மேலும், ராமர் கோவில் அருகில் ராமாயணத்துடன் தொடர்புடைய மன்னர்களின் வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதில் மனு என்ற மன்னரில் தொடங்கி அயோத்தி நகரின் முழு வரலாறும் சித்தரிக்கப்படும். விஷ்ணுவின் அவதாரங்களும் அதற்கான காரண விளக்கமும் இங்கு சித்திர வடிவில் சித்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Worldstalleststatue #LordRam #Ayodhya
Next Story






