என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mann Ki Baat"

    • இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
    • காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார்.

    தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் 2 மிகப் பழமையான நகரங்களின் சங்கமம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. நான் காசி தமிழ் சங்கமம் பற்றிப் பேசுகிறேன். 4-வது காசி தமிழ் சங்கமம் வருகிற 2-ந் தேதி வாரணாசியில் தொடங்குகிறது. இந்த ஆண்டு கருப்பொருள் மிகவும் சுவாரசியமானது. அது தமிழ் கற்க என்பதாகும்.

    காசி தமிழ் சங்கமம் தமிழ் மொழியை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது. தமிழ் கலாச்சாரம் சிறந்தது. தமிழ் மொழி சிறந்தது. தமிழ் பாரதத்தின் பெருமை.

    விவசாயத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 357 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்து உள்ளது.

    இளைஞர்களின் அர்ப்பணிப்பையும், விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது. இளைஞர்களின் இந்த அர்ப்பணிப்பு வளர்ச்சி இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும்

    வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா, மத்திய மண்டபத்தில் அரசியலமைப்பு தின கொண்டாட் டம் மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது ஆகியவை இந்த மாதத்தில் நடந்த உத்வேககரமான முன்னேற்றங்களில் அடங்கும்.

    இவ்வாறு மோடி பேசியுள்ளார்.

    நாடு முழுவதும் தேனீ வளர்ப்பு முயற்சிகள், விளையாட்டுத் துறையில் சாதனைகள், 2030-ல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை இந்தியா வென்றது. ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பிரதமர் விரிவாகப் பேசினார்.

    • தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம்.
    • தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

    அவர் இன்று 126-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி விழா ஆகும். காந்தி எப்போதும் சுதேசியை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்தினார். அவற்றில் காதி முதன்மையானது. துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு காதியின் வசீகரம் மங்கிக் கொண்டிருந்தது.

    ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் காதி மீதான நாட்டு மக்களின்ஈர்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் காதி விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அக்டோபர் 2-ந்தேதி காதி பொருட்களை வாங்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    காதியைப் போலவே, நமது கைத்தறி மற்றும் கை வினைத் துறையும் குறிப்பி டத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. தமிழ் நாட்டை சேர்ந்த அசோக் ஜெகதீசன், பிரேம் செல்வராஜ் ஆகியோர் தங்கள் நிறுவன வேலைகளை விட்டுவிட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டனர்.

    அவர்கள் புல் மற்றும் வாழை நார்களிலிருந்து யோகா பாய்களை உருவாக்கினர். மூலிகை சாயங்களால் ஆடைகளுக்கு சாயம் பூசினர்.மேலும் 200 குடும்பங்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை வழங்கினர்.

    சத் பூஜையை யுனெஸ்கோ வின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்திய அரசு பாடுபடுகிறது. சத் பூஜை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப்படும்போது, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள் அதன் மகத்துவத்தையும் தெய்வீ கத்தையும் அனுபவிக்க முடியும்.

    இந்த விஜயதசமி மற்றொரு காரணத்திற்காகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்ட 100 ஆண்டுகளைக் குறிக்கிறது. இந்த நூற்றாண்டு பயணம் அற்புதமானது, முன்னோடியில்லாதது மற்றும் ஊக்கம ளிக்கிறது.

    தியாகம், சேவை உணர்வு, ஒழுக்கத்தின் போதனைகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ்சின் உண்மையான பலம். ஆர்.எஸ்.எஸ் நூறு ஆண்டுகளாக அயராது மற்றும் தடையின்றி தேசத்திற்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளது.

    இதனால்தான் நாட்டில் எங்காவது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர்கள் முதலில் அங்கு செல்கிறார்கள்.

    தேசம் முதலில் என்ற இந்த உணர்வு எப்போதும் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும் முதன்மையானது.

    தேசத்திற்கு சேவை செய்யும் மாபெரும் யாகத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வரும் நாட்களில், பண்டி கைகளும் கொண்டாட்டங்களும் தொடர்ச்சியாக வர உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் நிறைய பொருட் களை வாங்குகிறோம்.

    இந்த முறை ஜி.எஸ்.டி சீர் திருத்தங்களுடன் பொருட்களை வாங்க உள்ளீர்கள். இந்த பண்டிகையை உள்நாட்டு தயாரிப்புகளுடன் மட்டுமே கொண்டாட நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  

    • பேரழிவுகள் வேதனையை அளித்தது.
    • இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 125-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த மழைக்காலத்தில் இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளை நாம் பார்த்தோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் நீரில் மூழ்கின, குடும்பங்களும் அழிந்தன.

    இடைவிடாத வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டன, மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தின. பேரழிவுகள் வேதனையை அளித்தது.

    மீட்பு நடவடிக்கையின் போது தேசிய பேரிடர் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படையினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

    எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவும், பகலும் உழைத்தனர். வீரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றனர் . நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள், டிரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் ஆயுதப் படைகள் உதவின. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், டாக்டர்கள், நிர்வாகம் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புல்வாமாவில் ஒரு மைதானத்தில் சாதனை எண்ணிக்கையிலான மக்கள் கூடினர். முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றது. இது முன்பு அங்கு சாத்தியமற்றது. ஆனால் இப்போது நாடு மாறிக்கொண்டு இருக்கிறது என்று பேசினார்.

    • மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • இந்நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியே மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    மாநிலங்களவையில் மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

    மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

    மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
    • தஞ்சையை சேர்ந்த மணிமாறன் ஓலைச்சுவடிகளை படிக்கும் முறையை இளைஞர்களுக்கு கற்பிக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாடி வருகிறார். தனது 124-வது உரையில் மோடி கூறியதாவது:-

    விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சுபான்ஷூ சுக்லா திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி தொடர்பான உங்களது ஆலோசனைகளை எனக்கு அனுப்பலாம். இந்தியா முழுவதும் குழந்தைகளிடம் விண்வெளி ஆர்வம் பரவி வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு 50-க்கும் குறைவான ஸ்டார்ட் அப்கள் இருந்தன. இன்று விண்வெளி துறையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. ஆகஸ்ட் 23-ந் தேதி தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும்.

    1905-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ல் ஒரு புதிய புரட்சி தொடங்கியது. சுதேசி இயக்கம் உள்ளூர் தயாரிப்புகளில் குறிப்பாக கைத்தறிகளில் புதிய ஆற்றலை செலுத்தியது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந்தேதி தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடுகிறோம்.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும். சுய சார்பு மூலம் வல்லரசு நாடாக இந்தியாவை உருவாக்குவோம். நாட்டின் இளைஞர்கள் சுயமாக தயாரிக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கொண்டு விளையாடும்போது, சுயசார்பு என்ற நோக்கம் எவ்வளவு பலம் பெறும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

    தஞ்சையை சேர்ந்த மணிமாறன் ஓலைச்சுவடிகளை படிக்கும் முறையை இளைஞர்களுக்கு கற்பிக்கிறார். ஓலைச்சுவடிகளில் நமது வரலாறு, விஞ்ஞானம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன.

    நடப்பாண்டு பட்ஜெட்டில் ஓலைச்சுவடி எழுத்துக்களை டிஜிட்டல் வடிவமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு புராதன அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

    • மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.
    • மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 120-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    இன்று பல்வேறு மாநிலங்கள் தங்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடுகின்றன. அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சைத்ர நவராத்திரி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய புத்தாண்டும் இந்த நாளில் இருந்து தொடங்குகிறது. வரும் நாட்களில் ஈத் உள்பட பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வரும் நாட்களில் கொண்டாடப்படவுள்ள பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையில் பரவியுள்ள ஒற்றுமையின் உணர்வை சுட்டிக்காட்டுகின்றன.

    பள்ளிகளில் கோடை விடுமுறை சில வாரங்களில் வர உள்ளது. கோடை விடுமுறையின் நீண்ட நாட்கள், மாணவர்கள் புதிய பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் திறன்களை மெரு கூட்டவும் ஒரு நேரம் ஆகும்.

    இன்று, குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்ளக்கூடிய தளங்களுக்கு பஞ்சமில்லை. கோடை காலம் நெருங்கி வருவதால் ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும், 'மழையைப் பிடி' பிரசாரம் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல நகரங்களிலும் கிராமங்களிலும் தண்ணீரைச் சேமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கடத்துவதே இதன் நோக்கமாகும். மழைத்துளிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாம் நிறைய தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க முடியும்.

    மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். இது இந்தியாவிலிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு ஆகும்.

    தற்போது, பழைய துணிகளை விரைவில் களைந்து விட்டு புதிய துணிகளை வாங்கும் போக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது ஜவுளிக் கழிவுகளாக மாறி வருகிறது. உலகின் அதிகபட்ச ஜவுளி கழிவுகள் உருவாகும் 3-வது நாடு இந்தியா. இதனால் நாம் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கிறோம்.

    ஆனால் இந்த சவாலை சமாளிக்க நம் நாட்டில் பல பாராட்டத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரியானாவில் உள்ள பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.

    இதேபோல் தமிழ்நாட்டின் திருப்பூர், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு உள்ளது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    பிரதமர் மோடி தனது பேச்சின் போது தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    • சோலார் சக்தி மூலம் பெரும் நன்மை ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
    • காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிவருகிறார்.

    இந்நிலையில், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்துகிறது.

    இன்று நாம் மிகப்பெரிய சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டோம். நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை சோலார் எரிசக்தி எவ்வாறு மாற்றுகிறது என்பதும் ஆய்வுப் பொருளாகும். சோலார் சக்தி மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்ற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பயனை அடைந்துள்ளார். அவரது பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு என எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை.

    இதேபோல் சூரிய சக்தி மூலம் பலர் பயனடைந்துள்ளனர். குஜராத்தின் மோதிரா பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சோலார் எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சூரிய மின்சக்தி போல் விண்வெளித் துறையிலும் இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகம்

    ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

    சில தினங்களுக்கு முன் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா நிலைநிறுத்தியது. இந்த சாதனை இந்தியாவிற்கு தீபாவளி பரிசாக அமைந்தது. இந்திய இளைஞர்களுக்காக விண்வெளித்துறை வாய்ப்புகள் திறக்கப்பட்டதும், புரட்சிகரமான மாற்றங்கள் வந்து கொண்டுள்ளன. டிஜிட்டல் துறையிலும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என தெரிவித்தார்.

    • கொரோனா பரவல் அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
    • உலக பொருளாதாரத்தில் நாம் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டின் ஆண்டின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், கல்வி, வெளியுறவுக் கொள்கை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றவர்.

    2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் அற்புதமானது. உலக பொருளாதாரத்தில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை காண்கிறோம். நாம் கவனமாக இருக்கவேண்டும் மற்றும் முக கவசம் அணியவேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளில் இருக்கும் மக்கள் கொரோனா விதிகளைப் பின்பற்ற வேண்டும். விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் நாட்கள் வைரசால் பாதிக்கப்படுவிடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத் துறையில் பல்வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை இந்தியாவில் இருந்து ஒழித்துவிட்டோம். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் யோகா செய்தால் நல்ல பலன் கிடைக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நோயாளிகள் தொடர்ந்து யோகா செய்வதால் நோய் மீண்டும் வருவது 18 சதவீதம் குறைக்கப்படுகிறது. மருத்துவ அறிவியலில் யோகாவும் ஆயுர்வேதமும் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • 1500 ஆண்டுகள் பழமையான உத்திரமேரூர் கல்வெட்டில் கிராமசபை கூட்டம் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது.
    • ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், கலாச்சாரத்திலும் உள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குருல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றி வருகிறார். அவரது 97-வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ரேடியோவில் ஒலிபரப்பானது.

    இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும். நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாடியதாவது:-

    உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். நமது நாடு ஜனநாயகத்தின் தாய் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.

    இந்திய கலாசாரத்தில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், நமது கலாசாரத்திலும் உள்ளது. இது பல நூற்றாண்டுகளாக நமது செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது.

    இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு மேம்பட்டுள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா சிறந்த இடத்தை பெறுவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    நக்சலைட்டுகளால் பாதித்த பகுதிகளில் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் சரியான பாதையை காட்டுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது. உத்திரமேரூரில் 1,100-1,200 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்த கல் வெட்டு உள்ளது.

    கிராம சபை எப்படி நடத்த வேண்டும் என்றும், அதில் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்றும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

    மின்சாதனப் பொருட்களை, அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்சாதன கழிவுகள் தூக்கி வீசப்படுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. மின் கழிவுகளில் இருந்து சுமார் 17 வகையான விலை மதிப்பற்ற உலோகங்களை பிரித்தெடுக்க முடியும்.

    வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கையை பாதுகாத்த முழு பெருமையும் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளை சேரும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள்.
    • மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் மனதின் குரல் (மான் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாடி வருகிறார்.

    இன்று 98-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் மனதின் ஆற்றலை நீங்கள் அறிவீர்கள். அதேபோல் சமூகத்தின் சக்தியுடன் நாட்டின் சக்தி எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பார்த்தோம். புரிந்து கொண்டோம், அனுபவித்தோம்.

    சர்தார்பட்டேலின் பிறந்தநாளான ஒற்றுமை நாள் அன்று மான் கி பாத் நிகழ்ச்சியில் தேச பக்தி பாடல்கள், தாலாட்டு மற்றும் ரங்கோலி ஆகிய போட்டிகளை பற்றி பேசினோம். இதில் நாடு முழுவதிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியோர் ஆர்வத்துடன் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் அனுப்பப்பட்டன. தாலாட்டு போட்டியில் முதல் பரிசை கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் வென்றுள்ளார். 2-வது பரிசை அசாமின் கம்ரூப் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் கோவாலா வென்றார்.

    ரங்கோலி போட்டியில் முதல் பரிசை வென்ற பஞ்சாப்பை சேர்ந்த கமல் குமார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் ஆகியோர் முழு ரங்கோலியை உருவாக்கினர். மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின் நரேந்திர அவ்சாரி, கோவாவை சேர்ந்த குருதத் வந்தேகர் காந்தி ஆகியோரும் வென்றுள்ளனர்.

    புதுச்சேரியை சேர்ந்த மாலதி செல்வம் பல சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் ரங்கோலியை அனுப்பி உள்ளார். தேச பக்தி பாடல் போட்டியில் ஆந்திராவை சேர்ந்த விஜயதுர்கா வெற்றி பெற்றார்.

    சில நாட்களுக்கு முன் இசை மற்றும் கலைத்துறையில் வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரங்கார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வி.துர்கா தேவி பண்டைய நடனமான கரகாட்டத்துக்காக வென்றுள்ளார்.

    கால அவகாசம் காரணமாக விருதுபெற்ற அனைவரையும் பற்றி இங்கு பேச முடியாமல் போகலாம். ஆனால் அவர்களை பற்றி கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    டிஜிட்டல் இந்தியாவின் சக்தியை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்து செல்வதில் பல்வேறு செயலிகள் பெரும் பங்குவகிக்கின்றன. அது போன்ற ஒரு செயலி இ-சஞ்சீவனி.

    சுகாதாரத்துறையின் இ-சஞ்சீவனி திட்டம், டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. இத்திட்டம் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் செயலியாக இ-சஞ்சீவனி மாறி உள்ளது.

    மக்கள் உறுதியாக இருந்தால் இந்தியாவை நிச்சயம் தூய்மைப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் பிளாஸ்டிக் பைகளை மாற்றி துணி பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பொதுமக்கள் (பை...பை) சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொரு வரும் உணறும் காலம் வரும்.

    ஒரு நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் ஒருவகை பறவை, ஒரு உயிரினம் காப்பாற்றப்பட்டது. அது உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இப்படி பல பாரம்பரியங்கள் நம் நாட்டில் மறைந்து மக்கள் மனதில் இருந்தும், இதயங்களில் இருந்தும் அழிந்து போயிருந்த போதிலும் இப்போது மக்கள் பங்கேற்ற சக்தியுடன் அவற்றை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஹோலி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இதை உள்ளூருக்கான குரல் என்று உறுதியுடன் நாம் விழாவை கொண்டாட வேண்டும்.

    பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதற்கு திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    • பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒலிபரப்பாக உள்ளது.
    • இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

    • இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர்.
    • அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

    இன்று அவர் 99-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மன் கி பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.

    இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள். சமீபத்தில் வந்தே பாரத் ரெயிலை ஆசியாவின் முதல் பெண் டிரைவர் சுரேகா யாதவ் இயக்கினார்.

    சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். நாகாலாந்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதை பெண் இயக்குனர் வென்றுள்ளார்.

    இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். உறுப்புகளை பெற்றவர்கள், தானம் செய்தவர்களை கடவுளாக பார்க்கிறார்கள்.

    பஞ்சாப்பில் சுக்பீர்சிங்-சுக்பீத் கவுர் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 39 நாட்களில் உலகை விட்டு பிரிந்தார். அந்த மகளின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

    சில மாதங்களுக்கு முன்பு காசி-தமிழ் சங்கமத்தின் போது காசிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகள் கொண்டாடப்பட்டன. நாம் ஒருவரையொருவர் தெரிந்து, அறிந்து கொள்ளும் போது ஒற்றுமை உணர்வு வலுவடைகிறது.

    இந்த ஒற்றுமை உணர்வுடன் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் அடுத்த மாதம் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற உள்ளது. சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஏப்ரல் 17 முதல் 30-ந்தேதி வரை நடைபெறும்.

    குஜராத்தில் உள்ள சவுராஷ்டிராவுக்கும், தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு? என்று சிலர் ஆச்சரியப்படுவார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிராவை சேர்ந்த பலர் தமிழ்நாட்டின் பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்றும் சவுராஷ்டிரா தமிழர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    இந்நிகழ்ச்சி குறித்து தமிழகத்தை சேர்ந்த பலர் எனக்கு பாராட்டு கடிதங்கள் எழுதியுள்ளனர். மதுரையில் வசிக்கும் ஜெயச்சந்திரன் எழுதிள்ள கடிதத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு சவுராஷ்டிரா-தமிழ் உறவுகளை பற்றி முதன் முறையாக ஒருவர் சிந்தித்து, சவுராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டில் குடியேறிய மக்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளார். இவரது இந்த வார்த்தைகள் ஆயிரக்கணக்கான தமிழ் சகோதர, சகோதரிகளின் வெளிப்பாடு.

    நாட்டின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சுகாதாரமான சூழலை மக்கள் அமைத்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×