உறுப்பு தானம் செய்த 10 மாத குழந்தையை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது.
உறுப்பு தானம் செய்த 10 மாத குழந்தையை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
Published on

கேரளாவின் 10 மாத உறுப்பு தானம் செய்தவரான அலின் ஷெரின் ஆபிரகாமை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 131வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "எந்தவொரு பெற்றோருக்கும் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமி ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம். உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது, மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கம் பெற்று வருகிறது, உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்ற பலர் உள்ளனர்..." என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லம் போர்மா சந்திப்பில் நடந்த ஒரு சாலை விபத்தை தொடர்ந்து அலின் ஷெரின் மூளைச்சாவு ஏற்பட்டது. விரைவில் குடும்பத்தினர் உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர். அவளுடைய பெற்றோர்களான அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் ஆன் ஜான், அவளுடைய உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர்.

குழந்தையின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தானம் செய்யப்பட்டன. சிகிச்சையில் இருந்த ஆறு மாத குழந்தைக்கு கல்லீரல் கிடைத்தது. இதன் மூலம் கேரளா மாநிலத்திலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளம் குழந்தை என்ற பெருமையைப் பெற்றது.

சிறுநீரகங்கள் மற்றொரு குழந்தைக்கு ஒதுக்கப்பட்டன, அதே நேரத்தில் இதய வால்வு மற்றும் கார்னியாக்கள் தேவைப்படும் நோயாளிகளுக்கும் மாற்றப்பட்டன. விரைவில், கேரள காவல்துறை 10 மாத குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாமுக்கு மரியாதை செலுத்தியது, அவரது தன்னலமற்ற பங்களிப்பு ஐந்து பேரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com