என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன் கீ பாத்"

    • பேரழிவுகள் வேதனையை அளித்தது.
    • இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 125-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இந்த மழைக்காலத்தில் இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளை நாம் பார்த்தோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் நீரில் மூழ்கின, குடும்பங்களும் அழிந்தன.

    இடைவிடாத வெள்ளத்தால் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டன, மக்களின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தின. பேரழிவுகள் வேதனையை அளித்தது.

    மீட்பு நடவடிக்கையின் போது தேசிய பேரிடர் பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படையினரின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.

    எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் மக்களைக் காப்பாற்ற இரவும், பகலும் உழைத்தனர். வீரர்கள் தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்றனர் . நேரடி கண்டுபிடிப்பாளர்கள், மோப்ப நாய்கள், டிரோன் கண்காணிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் காலங்களில் ஆயுதப் படைகள் உதவின. உள்ளூர் மக்கள், சமூக சேவையாளர்கள், டாக்டர்கள், நிர்வாகம் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரும் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். இந்த கடினமான காலங்களில் மனிதகுலத்திற்கு முன்னுரிமை அளித்த ஒவ்வொரு குடிமகனுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    புல்வாமாவில் ஒரு மைதானத்தில் சாதனை எண்ணிக்கையிலான மக்கள் கூடினர். முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி அங்கு நடைபெற்றது. இது முன்பு அங்கு சாத்தியமற்றது. ஆனால் இப்போது நாடு மாறிக்கொண்டு இருக்கிறது என்று பேசினார்.

    • மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
    • இந்நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியே மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    மாநிலங்களவையில் மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

    மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

    மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
    • இன்றைய தலைமுறையின் பல குழந்தைகள் சிட்டுக்குருவிகளை படங்களிலோ, வீடியோக்களிலோ மட்டுமே பார்க்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 116-வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

    சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்தநாள் அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த முறை சிறப்பாக கொண்டாடப்படும். ஜனவரி 11, 12-ந் தேதிகளில் டெல்லி பாரத் மண்டபத்தில் வளர்ந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மாநிலம், மாவட்டம், கிராமங்களில் இருந்து 2 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒட்டு மொத்த குடும்பமும் அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் சேருமாறு செங்கோட்டையில் இருந்து வேண்டுகோள் விடுத்தேன். இதற்காக நாட்டில் பல சிறப்பு பிரசாரங்கள் நடத்தப்படும். அது போன்ற ஒரு முயற்சிதான் பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சி.

    இன்று என்.சி.சி. (தேசிய மாணவர் படை) தினம். என்.சி.சி என்ற பெயரைக் கேட்டவுடனே நம் பள்ளி, கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும்.

    நான் ஒரு என்.சி.சி உறுப்பினராக இருந்தேன். அதனால் நான் பெற்ற அனுபவம் எனக்கு விலை மதிப்பற்றது என்று முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். என்.சி.சி இளைஞர்களிடம் ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை உணர்வு வளர்கிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, 'தாயின் பெயரில் ஒரு மரம்' பிரசாரத்தைத் தொடங்கினோம். இதில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். தற்போது இந்த முயற்சி உலகின் பிற நாடுகளையும் சென்றடைகிறது.

    எனது சமீபத்திய கயானா பயணத்தின் போது அந்த நாட்டு அதிபர் இர்பான் அலி, அவரது மாமியார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் 'தாயின் பெயரில் ஒரு மரம்' பிரசாரத்தில் என்னுடன் இணைந்தனர்.

    நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தை பராமரிப்பதில் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இன்று சிட்டுக்குருவிகள் நகரங்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, சிட்டுக்குருவிகள் நம்மை விட்டு விலகிவிட்டன.

    இன்றைய தலைமுறையின் பல குழந்தைகள் சிட்டுக்குருவிகளை படங்களிலோ, வீடியோக்களிலோ மட்டுமே பார்க்கிறார்கள்.

    சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பிரசாரத்தில் சென்னையின் கூடுகள் அறக்கட்டளை பள்ளி மாணவர்களை ஈடுபடுத்துகிறது. அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பள்ளிகளுக்குச் சென்று, அன்றாட வாழ்வில் சிட்டுக்குருவிகள் எவ்வளவு முக்கியம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்கிறார்கள்.

    இந்த நிறுவனம் சிட்டுக்குருவிகள் கூடுகளை உருவாக்க குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. ஒரு சிறிய மர வீடு செய்ய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அதில் சிட்டுக் குருவிகள் வாழ்வதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    புத்தகங்கள்' மனிதர்களின் சிறந்த நண்பன். இந்த நட்பை வலுப்படுத்த நூலகம் சிறந்த இடம் ஆகும். சென்னையில் குழந்தைகளுக்காக பிரகிருத அறிவகம் என்ற அத்தகைய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மையமாக மாறி உள்ளது.

    இந்த நூலகம் ஸ்ரீராம் கோபாலன் என்பவரின் சிந்தனையாகும். அவர் வெளிநாட்டில் பணிபுரிந்த போது குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பது குறித்து தொடர்ந்து யோசித்தார். இந்தியா திரும்பிய பிறகு இந்த அறிவகத்தை நிறுவினார்.

    இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு குழந்தைகள் படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் கதை சொல்லும் அமர்வுகள், கலைப் பட்டறைகள், நினைவகப் பயிற்சி வகுப்புகள், ரோபாட்டிக்ஸ் பாடங்கள் , பொதுப் பேச்சு என குழந்தைகளை ஈர்க்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×