மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: மத்திய மந்திரி தகவல்

மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.
மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று வானொலியில் மக்களிடம் உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியே மனதின் குரல் எனப்படும் மன் கீ பாத் நிகழ்ச்சி. பிரதமர் மோடியின் பேச்சு நாடு முழுவதும் மக்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய மந்திரி எல்.முருகன் எழுத்துப்பூர்வமான அளித்துள்ள பதில் மூலம் இந்த விவரம் வெளியாகியுள்ளது.

மன் கீ பாத் நிகழ்ச்சி கூடுதல் செலவுகள் இல்லாமல், தற்போதுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஆகாஷ்வாணியால் தயாரிக்கப்படுகிறது என மந்திரி எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

மன் கீ பாத் நிகழ்ச்சி 2014ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com