என் மலர்
செய்திகள்

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் 144 தடை உத்தரவு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் போலீசார் தவிர துணை ராணுவத்தினரும் அதிரடி படையினரும் பெரும் அளவில் அயோத்திக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
2500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் ரோந்து பணியில் இருப்போர் எந்த நேரமும் உஷார் நிலையில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. #Ayodhya #Section144 #BabriMasjid
Next Story