search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fascism"

    • தமிழகத்தில் பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞர் அணிகளுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி தான். அப்போது மாணவ

    ரணியில் இருந்தவர்கள் தான் தற்போது அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்.

    கல்லூரிகளில் மாணவரணியில் இருப்பவர்கள் திராவிட மாடலை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இந்தியை எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டுமே ஆகும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்க இருக்கிறார்.

    பாசிசத்தை தமிழகத்தில் நுழைய விடாத வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதல் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,வழக்கறிஞர் கலாநிதி, மாணவர் அணி இணை, துணை அமைப்பாளர்கள் அதலை செந்தில்குமார், பூவை ஜெரால்டு, மண்ணை சோழராஜன், சேலம் தமிழரசன், உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தால் நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறியுள்ளார். #Sophia #ManishTewari
    புதுடெல்லி:

    தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக கோஷமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதை காங்கிரஸ் கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.



    இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டெல்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், “இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

    மேலும் அவர் கூறும்போது, “தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்றும் குறிப்பிட்டார்.   #Sophia #ManishTewari
    ×