search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slapped"

    • கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார் .
    • மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் கல்லூரி செல்வதற்காக மாணவி ஒருவர் கோவை செல்லும் பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பஸ்சில் படிக்கட்டில் நின்றிருந்த முதியவர் ஒருவர் அந்த மாணவியிடம் பேக்கில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார் .

    அந்த மாணவி கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து தர்மஅடி கொடுத்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் முதியவரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பட்டேலை ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.



    பட்டேல் சமூகத்தினரின் இட ஒதுக்கீடுக்காக போராடிய ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் அறைந்த நபரை அங்கிருந்த தொண்டர்கள் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #HardikPatel
    மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையான கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன” என்று கூறப்பட்டு இருந்தது.



    அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் தங்களது இணையதளத்தில் 3 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி உத்தரவிட்டது.

    இந்நிலையில், நேற்று இந்த மனு, நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் சுப்ரீம் கோர்ட்டு சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர்.

    புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களும் இத்தகவல்களை வெளியிடாதபோதிலும், இப்போதைக்கு அவற்றுக்கு அபராதம் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறினர். அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #MidDayMeal #Tamilnadu #Jharkhand #SupremeCourt
    காவல் நிலையத்திற்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது கான்ஸ்டபிளை பா.ஜ.க. எம்.எல்.ஏ. அறைந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #BJPMLASlappedConstable
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டம் உதய் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டாவின் உறவினர் வந்துள்ளார். நள்ளிரவைத் தாண்டி காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், தடை செய்யப்பட்ட அறைக்குச் சென்று ஒரு நபரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை பிடுங்கி உள்ளார். இதனை பணியில் இருந்த கான்ஸ்டபிள் சந்தோஷ் தடுத்து நிறுத்தி திட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உறவினர், எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா உடனடியாக தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கான்ஸ்டபிளை மாறி மாறி கன்னத்தில் அறைந்தார். கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

    அதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சம்பாலால் தேவ்டா மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. எம்.எல்.ஏ. அடிக்கும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக எம்.எல்.ஏ.விடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், தவறு செய்திருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தலைமை கூறியுள்ளது. #BJPMLASlappedConstable
    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் மந்திரி டேனியஸ் அஜீஸை இம்ரான்கான் கட்சியின் முக்கிய தலைவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் ‘ஜியோ’ நியூஸ் சேனல் சமீபத்தில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தியது. அதில் தனியார்மய துறை மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி தலைவர் நீமுல் ஹக், பாகிஸ்தான் மக்கள் கட்சி நபீசா ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் மந்திரி டேனியல் அஜீஸ், இம்ரான்கான் கட்சி தலைவர் நீமுல் ஹக்கை ‘திருடன்’ என தெரிவித்தார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த ஹக் மந்திரி டேனியல் அஜீஸை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அஜீஸ் நிலை குலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் நபீசா ஷா, மற்றொரு சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சியும் பாதியில் முடிக்கப்பட்டது.

    நடந்த சம்பவத்துக்கு மந்திரி அஜீஸ் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “இது பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய சதி. ராணுவம் மற்றும் நீதித்துறையின் பின்னணியில் இருந்து கொண்டு இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு அழிந்து விடுகிறது என்றார்.

    இதுகுறித்து, இம்ரான் கான் கட்சி தலைவர் ஹக் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அஜீஸ் ராணுவ தளபதிகள் குறித்தும், இம்ரான்கான் குறித்தும் நாகரீகமற்ற வார்த்தைகளால் பேசினார். அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டு உண்மையை பேசுவார்” என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு இவர் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஜமீல் எஸ்.காம்ரோ மீது தண்ணீர் டம்ளரை வீசியுள்ளார். #Tamilnews
    ×