search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide"

    • அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார்.
    • சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு, கொங்கம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பானுமதி (31). இவர்களுககு ஒருமகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 16-ந் தேதி பானுமதி தனது தாய் பிரேமாவுக்கு போன் செய்து மகன் ரோகித்தை கூட்டி வரும் பொது சேமியா வாங்கி வர சொல்லி உள்ளதாக தெரிகிறது. பானுமதி மகன் ரோகித்துடன் அவரது தாய் சேமியா வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் பானுமதி மகள் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அம்மா எங்கே என் கேட்ட போது அம்மா வீட்டின் அறையை சாத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து அறையை தட்டிப் பார்த்த போது அறை தாழிட்டிருந்த நிலையில் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

    அப்போது அறையில் பானுமதி தூக்குபோட்டு தொங்கி கெண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானுமதியின் தாய் பிரேமா கூச்சலிட்டார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பானுமதியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பானுமதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பாக தாய் பிரேமா சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகார் அடிப்படையில் பானுமதி எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(37). டிராக்டர் டிரைவா். இவரது மனைவி பூங்ககொடி. மாதேஷிற்கு மதுப்பழக்கம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக மாதேஷ் மது குடித்து விட்டு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பூங்கொடி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாதேஷை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

    இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

    மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி உதயா (51). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் உதயா வுக்கு உடல்நிலை சரி யில்லை என கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் அவர் மன வேதனையில் இருந்த வந்தார். இந்த நிலையில் உதயா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பெற்றோர் பேசாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கிராமம் கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    பிரபாகரன் பெருந்து றையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்துவுக்கு ஏற்கனவே ஒருவரிடம் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்தபோது பிரபாகரனிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2 பேரும் கடந்த மே மாதம் 30-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த திருமணத்திற்கு இந்துவின் பெற்றோர் விருப்பம் தெரிவிக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் இந்துவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது இந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது பெற்றோர் தன்னிடம் பேசாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் மனைவியை சிகிச்சை க்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை அருகே மது போதையில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த செல்வம் நகரை சேர்ந்தவர் சகுந்தலா (51). இவர் தனது குடும்பத்தினருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி (70).

    இவர் பெருந்துறை அருகே உள்ள மேற்கு ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கிருஷ்ணசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்த ன்று இரவு மது போதையில் கிருஷ்ணமூர்த்தி தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரையை (விஷம்) சாப்பிட்டு விட்டு தனது மகள் சகுந்தலாவுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக சகுந்தலா தனது தம்பி வெங்கடாசலம் உதவியுடன் கிருஷ்ண சாமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் பிரச்சனையால் மன வருத்தத்தில் இருந்த விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள சேமலை பாளை யத்தை சேர்ந்தவர் கதிரே சன் (37). இவர் அரச்சலூர் அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியில் தறிப்பட்டறை ஒன்றை லீசுக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    இவர் வங்கி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் பெற்று தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லாததால் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாதவும் கூறப்படுகிறது.

    இதனால் அவரால் கடன் கட்ட முடியவில்லை. தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் கதிரேசன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கதிரேசன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்டு அவரது மனைவி கவிதா அவரிடம் விசாரித்தார். அப்போது கதிரேசன் எலி மருந்தை (விஷம்) தின்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மீட்டு பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்.
    • சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்

    புதுச்சேரி:

    வைத்திக்குப்பத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். மீனவர். இவரது மனைவி சுமதி (வயது45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுமதி மனநிலை பாதிக்கப்பட்டு அந்த வழியாக செல்பவர்களை திட்டுவது, தூக்கத்தில் சத்தம் போடுவது, சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் சுமதி வீட்டில் மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியின் தம்பி சத்யராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதுமுதல் சுமதியும் தற்கொலை செய்துகொள்ள போவதாக அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி வருவார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த வேலையில் சுமதி மனநோய்க்கு வைத்திருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது கணவர் குமார் கொடுத்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இந்நிலையில் மணிகண்டன், திவ்யதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யதர்ஷினி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய் அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் உள்ள அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.
    • வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.

    சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு கல்லறை வீதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் பரமேஸ்வரி (வயது 24). சம்பத்தன்று வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவருத்தில் இருந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியை அவரது பெற்றோர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் பரமேஸ்வரியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது உறவினர் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.

    • மொடக்குறிச்சி அருகே கடன் தொல்லையால் கேபிள் கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவரது மனைவி கோகிலா. இவர்கள் பெருந்துறையில் கேபிள் கடை வைத்து நடத்தி வந்தனர்.

    கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்அவர் தனது பெற்றோரிடம் சொத்தில் பங்கு கேட்டார். ஆனால் அவர்கள் தர மறுத்து விட்டனர். கடன் தொல்லையால் கார்த்திகேயன் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கார்த்திகேயன் வண்ணாம் பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மனைவியுடன் வந்து தங்கி இருந்ததார். இதையடுத்து கோகிலா அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த கார்த்திகேயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தடாகிசோலா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா பட்டி. உறவுக்கார பெண்களான அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த இவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு ஷியாமா பட்டி இன்று பிணமாக தொங்கினார். இதைக்கண்ட கிராம மக்கள் சடார் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் ஷியாமா பட்டியின் பிரேதத்தை தூக்கில் இருந்து இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த வேளையில், ஷியாமா பட்டியின் வீட்டினுள் அவரது மனைவிகள் இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    அங்கு கிடந்த ரத்தம் தோய்ந்த சுத்தியலை கண்டெடுத்த போலீசார், மனநோயாளி ஷியாமா பட்டி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×