search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறி உரிமையாளர்"

    • சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள வெள்ளித்திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சிவா (43). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி தமிழ்செ ல்வி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 6 மா தங்களுக்கு முன்னர் சிவாவின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் கொடுத்தவர்களுக்கு பண த்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சிவா மதுவுக்கு அடிமையாகி தொழிலையும் சரி வர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று காலை தங்களது உறவினர் ஒருவரை பார்க்க தமிழ் செல்வி வெளியே சென்றுவிட்டார். மகளும் பள்ளிக்கு சென்றுவி ட்டார்.

    தொடர்ந்து சிவாவின் மகன் மாலையில் வீட்டுக்கு வந்தபோ து வீட்டின் உள் அறையில் சிவா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் உதவியு டன் மீட்டு அந்தியூர் அரசு மரு த்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சிவா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×