search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Powerloom Owners"

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
    • தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசி அடுத்த தெக்கலூரில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம், தலைவர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பார்த்திபன் பொருளாளர் குமாரசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    விசைத்தறி தொழிலுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நாளை 16-ந்தேதி, கோவை, எஸ்.என்.ஆர்., கல்லூரி வளாகத்தில், நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம்.
    • 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    பல்லடம் :

    மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வருக்கு விசைத்தறியாளர்கள் பதிவுத் தபால் அனுப்பும் நிகழ்வை தொடங்கினர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், 10 முதல் 20 தறிகள் வரை வைத்து நெசவு தொழில் செய்து வருகிறோம். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பஞ்சு நூல் விலை உயர்வு, கூலி உயர்வு பிரச்னை என அடுத்தடுத்த பிரச்னைகளால் எண்ணற்ற பாதிப்புகளை சந்தித்தோம்.கூலி அடிப்படையில் 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து வரும் இத்தொழிலில் மாதம், 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். இதில் 10 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணத்துக்கேசென்றால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? நலிந்து வரும் விசைத்தறி தொழிலுக்காக, 750 யூனிட் இலவசம் மின்சாரம் பெற்று வருகிறோம்.

    கடந்த 2012ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது கோரிக்கையை ஏற்று ரத்து செய்யப்பட்டது. தற்போது 36 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தால் ஒட்டுமொத்த விசைத்தறி தொழிலும் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலின் நிலையை கருத்தில் கொண்டு, விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 ஆயிரம் தபால்கள் அனுப்பும் நிகழ்வை துவங்கியுள்ளோம் .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×