search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

    • கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பெற்றோர் பேசாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கிராமம் கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    பிரபாகரன் பெருந்து றையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்துவுக்கு ஏற்கனவே ஒருவரிடம் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்தபோது பிரபாகரனிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2 பேரும் கடந்த மே மாதம் 30-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த திருமணத்திற்கு இந்துவின் பெற்றோர் விருப்பம் தெரிவிக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் இந்துவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது இந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது பெற்றோர் தன்னிடம் பேசாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் மனைவியை சிகிச்சை க்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×