search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commits suicide"

    • சசிகலா தனது வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
    • இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் தண்ணீர் பந்தல் சின்னமுத்தூரைச் சேர்ந்தவர் தங்கமணி (45). இவரது கணவர் ரத்தினசாமி (51). இவர்களது மகள் சசிகலா (26).

    இவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வெங்கமேட்டூர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சசிகலா காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது பெற்றோர் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அதன் பின்னர் உயர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். இதுகுறித்து, சசிகலாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மகனின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தார் .
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கோவில்பா ளையத்தை அடுத்த காளப்பட்டியை சேர்ந்த வர் கண்ணன் (வயது 46). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு ஹரிஹரன் (20) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வரகிறார். இந்த நிலையில் கண்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

    சம்பவத்தன்று கண்ணன் அவரது மகன் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்து செலவு செய்தார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் ராஜேஸ்வரி அவரை கண்டித்தார்.

    இதனை நினைந்து கண்ணன் மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ஹரிஹரன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வேட்டைக்காரன் கோயில் மேற்கு கரடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (23).

    இவர் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள ஒரு பீட்சா, பர்கர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    மது அருந்தும் பழக்கமுடைய வினோத்குமாருக்கு கடந்த 2 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதற்காக அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக வினோத்குமார் வேலைக்கு செல்லவில்லை. அதனால் தான் வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு மாதத்தவணை செலுத்த தனது தந்தை கோவிந்தராஜிடம் பணம் கேட்டுள்ளார். அவரும் ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சாப்பிட்டு விட்டு தூங்க செல்வதாக தனது தாயாரிடம் கூறி சென்ற வினோத்குமார் படுக்கை அறைக்குள் சென்று சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.

    சற்று நேரம் கழித்து அதை பார்த்த அவரது தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வினோத்குமாரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே வினோத்குமார் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து வினோத்குமாரின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டிவலசு சாஸ்திரி சாலையை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 43). பெயிண்டர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் காணப்பட்டார். சம்பவத்தன்று வெங்கடாசலத்தின் மனைவி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடாசலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
    • விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் விமலா (49). இவரது கணவர் யாகோபு (54).

    இந்நிலையில் யாகோபு குடும்பத்தை கவனிக்காமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியையும், மகனையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதனால் விமலா தனது மகனுடன் கடந்த 15 வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    யாகோபு தங்களது பழைய வீடு இருக்கும் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியில் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் விமலாவை போன் மூலமாக தொடர்பு கொண்ட யாகோபுவின் சகோதரர் சி.எஸ்.ஐ. காலனியில் உள்ள அவர்களது பழைய வீட்டில் யாகோபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மனைவி விமலா அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் சாம்பள்ளி மாசிலா பாளையம், அரசன்காடு பகுதியை சேர்ந்தவர் மலர்கொடி (36). இவரது கணவர் சண்முகம் (40). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    சண்முகம் கடந்த ஒரு வருடமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் தங்கியிருந்து இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சண்முகம் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சம்பவத்தன்று போன் மூலமாக மலர் கொடியை தொடர்பு கொண்டு சண்முகம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மலர்கொடி மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் விசாரித்த போது சண்முகம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதுகுறித்து மலர்கொடி பெருந்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம்.
    • ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ராகினி (வயது40). இவருக்கும் வில்லியனூரை சேர்ந்த பெக்கோலன் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெக்கோலன் இறந்து விட்டார். இதையடுத்து ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ராகினி காக்கையன்தோப்பை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை ராகினி திருப்பி கேட்ட போது ராஜசேகர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராகினியை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராகினி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்துள்ள ஏமகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 46). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இவரது தங்கை கல்யாணி யுடன் தங்கி வசித்து வந்தார். திருமணம் ஆகாமல் உடல் நிலை சரியில்லாமல் அவதி பட்டு வருகிறோம் என ராணி வேதனை அடைந்து வந்தார்.

    இந்நிலையில் கல்யாணி வேலைக்கு சென்று விட்டார். ராணி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ராணி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.

    கல்யாணியின் மகன் மணிகண்டன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு மூடப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த அவர் மேலே ஏறி பார்த்தார். அப்போது ராணி தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இத குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராணியின் உடலை கைப்பற்றி கொடு முடி அரசு மருத்துவமனைக்கு பிரேதசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்தி பிரசாத் (வயது 25). பட்டதாரியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவரிடம், அவரது பெற்றோர் அவ்வவ்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் சக்தி பிரசாத் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் மணி எழுந்து வந்து பார்த்த போது மகன் சக்தி பிரசாத்தை காணவில்லை. இதனால் அவர் அருகே உள்ள இடங்களுக்கு மகனை சென்று தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே மணிக்கு சொந்தமான மாவு மில்லில் சக்தி பிரசாத் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குடும்பத்தினர் உதவியுடன் சக்தி பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்தி பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
    • காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

     கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரகாஷ். இவரது மனைவி தனலட்சுமி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன் -மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவாரம்பாளையம் வந்து வசித்து வந்தனர். இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து தனலட்சுமி கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவன் -மனைவி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தனலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு 

    • 39 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • அந்தப் பெண்ணுக்கு இது 3-வது திருமணம் ஆகும்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள தென்ன ம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசீலன் (வயது 30) தனியார் மில்லில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு 39 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு இது 3-வது திருமணம் ஆகும். இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அந்த இளம்பெண் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.மனைவி பிரிந்து சென்றதால் ரத்தினசீலன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்து மயங்கிவிழுந்தார். அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

    • குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
    • இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

    ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×