search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife death"

    • அந்தியூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் மனவேதனையில் இருந்த வாலிபர் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டு கொண்டார்.
    • இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இந்நிலையில் மணிகண்டன், திவ்யதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திவ்யதர்ஷினி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணி கண்டன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மணிகண்டனுக்கு அவரது தாய் ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மணிகண்டன் தற்கொலை செய்ய முடிவு எடுத்து வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்குபோட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது தாய் அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மணிகண்டனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் உள்ள அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்துப்பேட்டை அருகே கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.
    பத்மநாபபுரம்:

    குமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பல பிள்ளை (வயது 96). இவருடைய மனைவி தாணுபாய் (86). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் கூறி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, சாவிலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.
    பாகூர் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மனைவி திடீரென இறந்ததால் சிலமணி நேரத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    பாகூர்:

    புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 76). இவரது மனைவி ராதா (68).

    இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் தாய், தந்தை இருவரும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் ஏழுமலை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்தார். அவரை மனைவி ராதா உடன் இருந்து நன்றாக கவனித்து வந்தார்.

    நேற்று மாலையில் இருந்து ராதாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அவர் திடீரென இறந்துவிட்டார். தன்னை நன்றாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் ஏழுமலை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.

    இன்று காலை 11 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே ராதா இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்திருந்தனர்.

    இன்று மாலை உடல் தகனம் நடப்பதாக இருந்தது. திடீரென கணவர் ஏழுமலையும் இறந்து விட்டதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை அவர்களது உடல் ஆதிங்கப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

    தருமபுரி அருகே தொழிலாளியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. கல்குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச்  சேர்ந்தவர் குணபாலன் ( வயது 43). இவருக்கும் இவரது மனைவி ஜெயபாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எலிமருந்தை சாப்பிட்டு இறந்தார். 

    மனைவி இறந்த துக்கத்தில் குணபாலன் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், குணபாலன் கடந்த 7-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    அத்தாணியில் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி தாங்காமல் மனைவியும் மரணம் அடைந்தார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55).

    கடந்த திங்கட்கிழமை மாலை வெங்கடாசலம் வி‌ஷம் குடித்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

    வெங்கடாசலம் வி‌ஷம் குடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் அவரது மனைவி சித்ரா (45) சோகத்தில் இருந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த அதிர்ச்சி தாங்காமல் சித்ரா உடல் நலம் குன்றியது. இதில் அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

    வெங்கடாசலம்-சித்ரா தம்பதிக்கு லோகேஷ், சூரியன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். லோகேஷ் 9-ம் வகுப்பும், சூரியன் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இவர்கள் 2 பேரும் ஒரே நேரத்தில் தந்தையையும், தாயையும் இழந்து அனாதையாக தவிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே மனைவி இறந்த வேதனையில் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகிமை தாஸ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யாமேரி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சத்யாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகிமைதாஸ் கவலையடைந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போய்விட்டாரே என நினைத்து மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று மாலை மகிமை தாஸ் திடீரென வீட்டில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மகிமைதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    சரக்கு ஆட்டோ மோதி கணவன் கண் எதிரே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு பள்ளக்காட்டுபுதூர் சோளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவரது மனைவி ராதா (40). இவர் புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

    இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகுமாரும், ராதாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்காடு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். பின் இருக்கையில் ராதா அமர்ந்து இருந்தார். திருப்பூர் அருகே பள்ளக்காட்டுபுதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவனின் கண் எதிரே ராதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் புதுத்தாமரை பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). இவரது மனைவி சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்தது. உடல் கருகிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் மன வேதனையில் இருந்த கண்ணன், மனைவியை பிரிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இதனையடுத்து கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த 3 நாளில் கணவரும் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஒத்தக்கடை போலீசில் கண்ணனின் சகோதரர் சரவணகுமார் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (28). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெயலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். ஜெயலட்சுமியை காப்பாற்றும் முயற்சியில் ராமச்சந்திரனும், மாமனார் குருசாமியும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீதும் தீப்பற்றியது.

    பலத்த தீக்காயங்களுடன் 3 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். இதில் ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். ராமச்சந்திரன், குரு சாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக ஜெயலட்சுமியின் தந்தை பாண்டியன் சிலைமான் போலீசில் புகார் செய்தார். ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. நல்லு வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலட்சுமி மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பேசாமல் இருந்த வந்த வாலிபர் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 42), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து 11 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணகுமார் யாருடனும் பேசாமல் காணப்பட்டு வந்தார். இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவர், சம்பவத்தன்று விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். 

    இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் புதுக்கடையை அடுத்த காப்பிக்காடு குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 48), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இல்லை. இதனால் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையில் காதல் மனைவி இறந்த 5 நாளில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 31). கட்டிட தொழிலாளி.

    இவரும், செல்லப்பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதா (23)வும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி பொன்னரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பொன்னரசனுக்கும், நிவேதாவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார்.

    உடனடியாக பொன்னரசனும், அவரது தாய் தமிழ்ச்செல்வியும் தூக்கில் இருந்து நிவேதாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நிவேதாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து அங்கிருந்த பொன்னரசனை தாக்கினர். மேலும் வரதட்சணை கொடுமையால் நிவேதாவை பொன்னரசன் அடித்து கொன்று விட்டதாக லாஸ்பேட்டை போலீசில் நிவேதாவின் தந்தை சுந்தரேசன் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகிர் உசேன், தயாளன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் பொன்னரசனை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, போலீசாரிடம் பொன்னரசன் உருக்கமான தகவல்களை தெரிவித்தார்.

    நிவேதாவை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்ததாகவும், வரதட்சணைக்காக அவரை நான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் உயிருக்குயிரான மனைவி நிவேதா இறந்த அன்று இரவே நானும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், அப்போது இதனை குடும்பத்தினர் தடுத்து விட்டதாக பொன்னரசன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் காதல் மனைவி நிவேதா இறந்த வேதனையில் விரக்தியில் இருந்து வந்த பொன்னரசன் இன்று காலை 10 மணியளவில் மது குடித்து விட்டு காலி மதுபாட்டிலுடன் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டின் அருகே உள்ள காலிமனைக்கு சென்ற அவர் திடீரென பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த பொன்னரசன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் மனைவி இறந்த 5 நாளில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×