search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto hit"

    முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    முசிறி:

    ஈரோடு மாவட்டம், வீரப்ப சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கார்த்திக் (23). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சமயபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது திருச்சி- நாமக்கல் சாலையில் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தைகைப் பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து காரைக்குடியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடாசலம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவன் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத் தியது.

    வேலூர்:

    வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் வரதலாம்பள்ளியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் இவரது மகன் திலக்ராஜன் (வயது 10). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    திலக்ராஜன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

    ஆட்டோ டிரைவருடன் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். மாந்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது நிலை தடுமாறி திலக்ராஜன் கீழே விழுந்தார். ஆட்டோவின் பின் சக்கரம் திலக்ராஜன் மீது ஏறி இறங்கியது.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு திலக்ராஜன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரக்கு ஆட்டோ மோதி கணவன் கண் எதிரே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு பள்ளக்காட்டுபுதூர் சோளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவரது மனைவி ராதா (40). இவர் புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

    இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகுமாரும், ராதாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்காடு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். பின் இருக்கையில் ராதா அமர்ந்து இருந்தார். திருப்பூர் அருகே பள்ளக்காட்டுபுதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவனின் கண் எதிரே ராதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் முத்தலீப். இவருடைய மகன் சாதிக்பாட்சா (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா மகன் ஜெய்லானி (வயது38). இவர்கள் இருவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.

    நேற்று இரவு சாதிக்பாட்சாவும், ஜெய்லானியும் ஒரு மொபட்டில் பண்டாரவாடையிலிருந்து அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மொபட்டை ஜெய்லானி ஓட்டினார்.

    இவர்கள் இருவரும் நெடுந்தெரு பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது எதிரில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சாதிக்பாட்சா, ஜெய்லானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள் மோதியதால் தடுமாறி விழுந்த என்ஜினீயர் மீது ஆட்டோ மோதியதில் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை வீதியை சேர்ந்தவர் வீரய்யன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதை. இவர்களது ஒரே மகன் விவேக் அசோக் பிரசாத் (வயது 27). இவர், எம்டெக் (என்ஜினீயரிங்) படித்து முடித்து வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் விவேக் அசோக்பிரசாத் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    புதுவை சுப்பையா சாலை ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விவேக் அசோக் பிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில், நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த விவேக் அசோக் பிரசாத் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவேக் அசோக் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சஜீத் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×