search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே ஆட்டோ மோதியதில் என்ஜினீயர் பலி
    X

    தவளக்குப்பம் அருகே ஆட்டோ மோதியதில் என்ஜினீயர் பலி

    மோட்டார் சைக்கிள் மோதியதால் தடுமாறி விழுந்த என்ஜினீயர் மீது ஆட்டோ மோதியதில் பரிதாபமாக இறந்து போனார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் மடுகரை வீதியை சேர்ந்தவர் வீரய்யன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யசோதை. இவர்களது ஒரே மகன் விவேக் அசோக் பிரசாத் (வயது 27). இவர், எம்டெக் (என்ஜினீயரிங்) படித்து முடித்து வேலை தேடி வந்தார்.

    இந்த நிலையில் விவேக் அசோக்பிரசாத் நேற்று மோட்டார் சைக்கிளில் புதுவை வந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    புதுவை சுப்பையா சாலை ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் விவேக் அசோக் பிரசாத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

    இதில், நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த விவேக் அசோக் பிரசாத் மீது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவேக் அசோக் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சஜீத் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×