search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested driver"

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    தக்கலை அருகே முளகு மூடு கூட்டமாவு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜூ, (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார். முளகுமூடு வயக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விஜின் (25). இவர் கேரளாவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    தற்போது நண்பனின் திருமண நிச்சயதார்த்தில் கலந்து கொள்வதற்காக விஜின் ஊருக்கு வந்திருந்தார். நேற்று ஷாஜூ தனது மோட்டார் சைக்கிளில் விஜினை அழைத்துக் கொண்டு கல்லுவிளையில் இருந்து சுவாமியார் மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கல்லுவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஷாஜூ, விஜின் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து ஷாஜூயின் உறவினர் மகேஷ் கொடுத்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் (58) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    விபத்தில் பலியான ஷாஜூ, விஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று தக்கலை ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

    முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    முசிறி:

    ஈரோடு மாவட்டம், வீரப்ப சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கார்த்திக் (23). கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சமயபுரம் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது திருச்சி- நாமக்கல் சாலையில் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தைகைப் பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து காரைக்குடியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வெங்கடாசலம் (51) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகையில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டிவந்த நாகூர் குயவர் தெருவை சேர்ந்த மரிய கண்ணு மகன் 
    ரஞ்சித் (வயது 24) என்பவரை கைது செய்தனர். 
    இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கருங்கல் ஏற்றிவந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.

    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி மற்றும் போலீசார் நேற்று தோட்டியோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எந்தவித அனுமதியும் இன்று கருங்கல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் லாரியை நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 38) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் கிளீனராக நெய்யூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ஜோஸ் (44) என்பவர் வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் அவர்களை எந்தவித அனுமதியும் இன்றி கருங்கல் ஏற்றி வந்ததாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எங்கிருந்து கருங்கல் ஏற்றி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போலீசார் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக கண்காணித்து வருகின்றனர். அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தூத்துக்குடி:

    அரிய வகை கடல் உயிரினமான கடல் அட்டைகள் மருந்து வகைக்காக பயன்படுத்தப்படுகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் இதனை சட்டவிரோதமாக கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கடல் அட்டைகள்  கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து மரைன் போலீசார் நேற்று இரவு திரேஸ்புரம் முத்திரையர் காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது படகில் இருந்து சாக்கு மூட்டைகள் ஒரு  ஏற்றப்பட்டு கொண்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ஆய்வு செய்த போது 160 கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வேன் டிரைவரான மகேந்திரன் (வயது 36) என்பரை கைது செய்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். 

    இந்நிலையில் இன்று தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் இன்று மரைன் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் உலர்த்தி வைக்கப்பட்ட 250 கிலோ அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தியவர்கள் யார் ? என்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் நேற்று, இன்று தொடர்ந்து கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    விராலிமலை:

    விராலிமலை அருகேயுள்ள தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 67). விவசாயி இவர் சம்பவதன்று திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலை  விராலிமலை கொண்டமநாயக்கன்பட்டி பிரிவு அருகே தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கிசென்ற கார் கருப்பையா மீது மோதியது. இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.
     
    இது குறித்து தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் விரைந்து சென்று கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து கார் டிரைவர் மதுரையைச் சேர்ந்தராஜ் பிரபுவை(24) கைது செய்தனர்.
    குருபரப்பள்ளி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிப்பாறையை சேர்ந்த பெரியண்ணன் மனைவி வேடியம்மாள்(30).  இந்நிலையில் இவரது உறவினரான டிரைவர் பெரியசாமி(38) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஏற்பட்ட நிலதகராறில், வேடியம்மாளை, பெரியசாமி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த வேடியம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கிருந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீஸ் எஸ்எஸ்ஐ சிவக்குமார் வழக்குபதிவு செய்து பெரியசாமியை கைது செய்தார்.
    லாரி விபத்தில் 2 பர் பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே புதுக்கடை குழிஞ்ஞன்விளையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 30), தொழிலாளி. இவருடைய அண்ணன் ரமேசுக்கு வருகிற 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை நடராஜன் கொடுத்து வந்தார்.

    அவர் உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி பகுதியில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்தார். அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (70) என்பவரை பார்த்ததும் அவர் அருகில் நடராஜ், ஸ்கூட்டரில் சென்றார். அவர்கள் இருவரும் சாலையோரத்தில் திருமண ஏற்பாடுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காப்புக்காடு உணவு குடோனில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நடராஜன், தங்கராஜ் மீது  பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததால் அதில் இருந்த அரிசி மூடைகள் சாலையில் விழுந்தன. விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த சூரியகோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார் (35) தப்பி ஓடிவிட்டார். லாரியில் இருந்த மூடை தூக்கும் தொழிலாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது

    விபத்து பற்றி கேள்விப்பட்டதும். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியானவர்களது உடல்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் அஜித்குமாரை கைது செய்தனர். அவரிடம் விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.
    இந்து இயக்க தலைவர்களை கொல்ல சதி திட்டம் கும்பலுக்கு உதவிய ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) தலைவர் அர்ஜூன் சம்பத், சக்திசேனா நிறுவனர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டத்துடன் ரெயிலில் கோவை வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கைதான திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக உள்ளார்.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் சம்சுதீன், ஒட்டேரி சலாவுதீன் மற்றும் கோவை என்.எச்.ரோடு ஆசிக் ஆகிய 4 பேரும் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். சதி திட்டத்துக்கு உக்கடத்தை சேர்ந்த பைசல் (28), குனியமுத்தூரை சேர்ந்த அன்வர்(29) என்ற 2 ஆட்டோ டிரைவர்கள் உதவி செய்வார்கள் என ஆசிக் தன்னிடம் கூறியதாக இஸ்மாயில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து பைசல், அன்வர் ஆகியோரை பிடிக்க வெரைட்டிஹால் போலீசார் தீவிரம் காட்டினர்.

    இது தொடர்பாக நேற்று பைசல் என்பவரை போலீசார் பிடித்தனர். அவர் எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மறுத்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் வழக்கில் தொடர்புடைய பைசல் இவர் இல்லை என்பது தெரியவந்தது. பெயர் குழப்பத்தால் அவரை பிடித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பினர்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர் பைசலை தேடினர். இன்று அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து போலீசார் கூறும்போது, சதிதிட்டத்துக்கு உதவி செய்வதாக கூறிய பைசல் என்பவரை பிடித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிவில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தா.பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வடக்கு வெளியிலிருந்து கண்ணனூருக்கு மணல் கடத்தி செல்வதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெம்புநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மணல் கடத்தி சென்ற டிராக்டரை வடக்குவெளி அருகில் மடக்கி பிடித்தனர். 

    பின்னர் ஒருயூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து, டிராக்டர் டிரைவர் சின்ன சேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர்.
    அரசு பஸ் மொபட் மீது மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர் பலியானார். தப்பி ஓடிய பஸ் டிரைவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவிலை அடுத்த தேரேகால்புதூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. இவரது மகள் இந்து(வயது24).

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு வங்கியில் இந்து, தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று வங்கி பணி காரணமாக வீரநாராயணமங்கலத்திற்கு மொபட்டில் சென்றார். பழையாற்று சானல் கரையோரம் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் சென்ற இந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து இந்துவின் உடலை மீட்டனர். பொதுமக்கள் திரண்டு வந்ததால், அரசு பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே ஆரவாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் இந்துவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு பகுதியைச் சேர்ந்த கிரிதர்(43) என தெரியவந்தது. அவர் மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 279, 304(ஏ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவர் இன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
    வேலாயுதம்பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து 45 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம், என். புதூர், கிழக்கு தவுட்டுப்பாளையம், நெய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி, டிராக்டர், லாரி, மற்றும் தவுட்டுபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளில்  திருட்டு தனமாக மணல் அள்ளி வருவதாக கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராசுவிற்கு  புகார் மனு சென்றது. அதன் அடிப்படையில் நேற்று 15-ந் தேதி  வேலாயுதம் பாளையம் போலீஸ்இன்ஸ் பெக்டர் குருநாதன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆறு முகம் மற்றும்  போலீசார் வேலாயுதம்பாளையம் -கொடுமுடி நெடுஞ்சாலையில் சேமங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது சேமங்கி காவிரி ஆற்றுப் படுகையில் சென்று பார்த்த போது ஒரு சரக்கு ஆட்டோவில் சுமார் 45 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு சென்றபோது சரக்கு ஆட்டோ டிரைவர் சேமங்கி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன்(41) என்பவர் சரக்கு ஆட்டோவை விட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். போலீசார் சுற்றி வளைத்து ஜெகதீசனை கைது செய்து சரக்கு ஆட்டோவை  பறிமுதல் செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
    ×