search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
    X

    தா.பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

    தா.பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    தா.பேட்டை:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வடக்கு வெளியிலிருந்து கண்ணனூருக்கு மணல் கடத்தி செல்வதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வத்துக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெம்புநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் மணல் கடத்தி சென்ற டிராக்டரை வடக்குவெளி அருகில் மடக்கி பிடித்தனர். 

    பின்னர் ஒருயூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து, டிராக்டர் டிரைவர் சின்ன சேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×