search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "granite"

    • மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜரானார்.
    • கிரா–னைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூ–ரில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குவாரிகளில் முறை–யீடு நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு–கள் பதிவு செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலான கிரானைட் வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஒரு சில வழக்குகள் இன்னும் மேலூர் கோர்ட்டிலேயே நடந்து வருகிறது. அதில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி தொடர் பான கிரானைட் வழக்கு மேலூர் கோட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது துரை தயாநிதி தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல கிருஷ்ணன், கிரானைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.
    • கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கிரானைட் மற்றும் கருங்கல் குவாரிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையும் சலுகை காட்டுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டிய தமிழக அரசுத் துறைகள் அதற்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

    இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கனிமவளக் கொள்ளையை அனுமதிக்கவே கூடாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. ஆனால், அதை சற்றும் மதிக்காமல் கிரானைட் கொள்ளை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும், கனிமவளத்துறையும் செயல்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிரானைட் கொள்ளை மற்றும் அதற்கு ஆதரவாக செயல்படும் அரசுத்துறைகள் குறித்து விசாரணை நடத்தினால் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஆக.16 -

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (55). இவர் சத்தியமங்கலம்- கோபிசெட்டிபாளையம் சாலையில் அரியப்பம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே கிரானைட் மற்றும் டைல்ஸ் கற்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    கடைக்கு பின்புறம் பணியாளர்கள் தங்குவதற்கான குடோன் மற்றும் செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    மேலும் அதே பகுதியில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நேற்று கார், மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டுள்ள செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கரும்புகைகள் வெளியேறுவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் செட்டில் வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து நாசமானது.

    நல்ல வேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கருங்கல் ஏற்றிவந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.

    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி மற்றும் போலீசார் நேற்று தோட்டியோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எந்தவித அனுமதியும் இன்று கருங்கல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் லாரியை நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 38) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் கிளீனராக நெய்யூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ஜோஸ் (44) என்பவர் வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் அவர்களை எந்தவித அனுமதியும் இன்றி கருங்கல் ஏற்றி வந்ததாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எங்கிருந்து கருங்கல் ஏற்றி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போலீசார் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக கண்காணித்து வருகின்றனர். அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உரிய அனுமதியின்றி மணல், கிரானைட் கற்கள் ஏற்றி செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்களில் மணல் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணிகள் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமங்கள் இருப்பு வைத்தல் போக்குவரத்து மற்றும் கனிம முகவர்கள் விதிகள் 2011-ன்படி ஜல்லி, மணல் மற்றும் இதர கனிமங்கள் லாரிகளில் எடுத்து செல்லும் போது பொது மக்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களில் மேற்பகுதிகளில் தார்பாய்கள் கொண்டு மூடி எடுத்து செல்ல அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ கனிமங்கள் எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு கனிம விதிகளின்படி வாகனம் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி மணல் மற்றும் கிரானைட் கற்கள் ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகன உரிமத்தையும் ஓட்டுனர் உரிமத்தையும், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×