search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auger"

    • மேலூர் கோர்ட்டில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இன்று ஆஜரானார்.
    • கிரா–னைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூ–ரில் ஏராளமான கிரானைட் குவாரிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த குவாரிகளில் முறை–யீடு நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அரசு சார்பில் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்கு–கள் பதிவு செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலான கிரானைட் வழக்குகள் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள ஒரு சில வழக்குகள் இன்னும் மேலூர் கோர்ட்டிலேயே நடந்து வருகிறது. அதில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி தொடர் பான கிரானைட் வழக்கு மேலூர் கோட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது துரை தயாநிதி தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல கிருஷ்ணன், கிரானைட் வழக்கை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    • வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக 8 பேர் புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராகினர்
    • தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கண்டறியும் வகையில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தில் இருந்து தடயவியல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. இதேபோல் 180-க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் 13 பேரிடம் டி.என்.ஏ. பாிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 8 பேர் வர மறுத்தனர். அவர்கள் பரிசோதனைக்கு விருப்பமில்லை என தெரிவித்ததோடு, அவர்கள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதில் 8 பேரையும் பரிசோதனைக்குட்படுத்த ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

    மேலும் வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக கோர்ட்டு சம்மன் அனுப்பியது. அதன்படி வேங்கைவயல் பகுதியை சேர்ந்த சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேர் நேற்று கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பான சம்மன் 8 பேருக்கும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டது.

    • அவரது அண்ணன் குணசேகரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
    • அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் ஆஜரானதும் தெரிய வந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கி ளில் எதிரே வந்தவர் இறந்து விட்டார்.

    இது தொடர்பாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் குணசேகரன் (வயது 43) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.

    இந்நிலையில் இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் வந்ததின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வழுதலைக்குடி பகுதியை சேர்ந்த அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் உண்மை என தெரிய வந்தது.

    அதனை அடுத்து அண்ணன் குணசேகரனை கைது செய்து அதற்கு துணை போன வக்கீல் குமாஸ்தா திருஞானம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×