search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth Commit suicide"

    மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி பொதுமக்கள் அவரது தந்தையிடம் புகார் செய்ய போவதாக கூறியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலம் அருகே உள்ள மாயனூரை சேர்ந்தவர் ராதா. (வயது 55). இவரது மகன் சிங்கிள் (18). இவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி அவரது தந்தை ராதாவிடம் புகார் செய்ய போவதாக கூறினர்.

    இதனால் பயந்து போன சிங்கிள் தனது உடலில் மண்ணணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் வடபாதி மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    புதுவையில் காதல் மனைவி இறந்த 5 நாளில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னரசன் (வயது 31). கட்டிட தொழிலாளி.

    இவரும், செல்லப்பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தரேசன் மகள் நிவேதா (23)வும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி பொன்னரசன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பொன்னரசனுக்கும், நிவேதாவுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்த நிவேதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கினார்.

    உடனடியாக பொன்னரசனும், அவரது தாய் தமிழ்ச்செல்வியும் தூக்கில் இருந்து நிவேதாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நிவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த நிவேதாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்து அங்கிருந்த பொன்னரசனை தாக்கினர். மேலும் வரதட்சணை கொடுமையால் நிவேதாவை பொன்னரசன் அடித்து கொன்று விட்டதாக லாஸ்பேட்டை போலீசில் நிவேதாவின் தந்தை சுந்தரேசன் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகிர் உசேன், தயாளன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் பொன்னரசனை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது, போலீசாரிடம் பொன்னரசன் உருக்கமான தகவல்களை தெரிவித்தார்.

    நிவேதாவை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்ததாகவும், வரதட்சணைக்காக அவரை நான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் உயிருக்குயிரான மனைவி நிவேதா இறந்த அன்று இரவே நானும் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், அப்போது இதனை குடும்பத்தினர் தடுத்து விட்டதாக பொன்னரசன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் காதல் மனைவி நிவேதா இறந்த வேதனையில் விரக்தியில் இருந்து வந்த பொன்னரசன் இன்று காலை 10 மணியளவில் மது குடித்து விட்டு காலி மதுபாட்டிலுடன் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டின் அருகே உள்ள காலிமனைக்கு சென்ற அவர் திடீரென பாட்டிலை உடைத்து கழுத்தை அறுத்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்த பொன்னரசன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதல் மனைவி இறந்த 5 நாளில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×