search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mental health impact"

    அரும்பார்த்தபுரத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்த புரம் சண்முகம் நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே ராமச்சந்திரன் சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் தனது மனைவி- மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் ராமச்சந்திரனை காணவில்லை.

    இதையடுத்து அவரது மனைவி பக்கத்து அறையில் சென்று பார்த்த போது அங்கு கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச்  சேர்ந்தவர் குணபாலன் ( வயது 43). இவருக்கும் இவரது மனைவி ஜெயபாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எலிமருந்தை சாப்பிட்டு இறந்தார். 

    மனைவி இறந்த துக்கத்தில் குணபாலன் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், குணபாலன் கடந்த 7-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    ×