என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tractor driver"
- மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கடம்பூர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(37). டிராக்டர் டிரைவா். இவரது மனைவி பூங்ககொடி. மாதேஷிற்கு மதுப்பழக்கம் உள்ளது.
கடந்த சில நாட்களாக மாதேஷ் மது குடித்து விட்டு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பூங்கொடி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாதேஷை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வீரசோழன் கிராமத்தை சேர்ந்த போஸ் என்பவர் தனது மனைவி பானுப்பிரியா, மகள் ஸ்ரீதேவி ஆகியோருடன் புதுக்குடி கிராமத்திலுள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவுக்கு சென்றிருந்தார். விழா முடிந்து 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீரசோழன்-அபிராமம் மெயின்ரோட்டில் வந்தபோது எதிரே செங்கல் ஏற்றி வந்த டிராக்டர், அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து 7-4-2013 அன்று நடந்தது. இது குறித்து வீரசோழன் போலீசார் விசாரணை மேற்கொண்டு டிராக்டர் டிரைவரான நல்லிக்குறிச்சியை சேர்ந்த முருகனை (28) கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி வசித்குமார் விசாரித்து டிராக் டர் டிரைவர் முருகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்