search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    டிராக்டர் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    • மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(37). டிராக்டர் டிரைவா். இவரது மனைவி பூங்ககொடி. மாதேஷிற்கு மதுப்பழக்கம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக மாதேஷ் மது குடித்து விட்டு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பூங்கொடி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாதேஷை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×