search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after drinking poison"

    • சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார்.
    • மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீல்வாணி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து(58). கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    தங்கமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கணவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்கமுத்து அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்,
    • இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ராசாம்பாளையம், தேவகியம்மாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் ( வயது 38 ) இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கு முருகேஸ்வரி (29) என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வெங்கடேசன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது . சண்டையிடும் போதெல்லாம் நான் தூக்கு மாட்டி அல்லது விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    அதன்படி சம்பவத்தன்று வெங்கடேஷ் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார், மனைவி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது வீட்டு வாசலில் வாயில் நுரையுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அப்போது டாக்டர் பரிசோதித்து பார்த்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடன் பிரச்சனையால் மன வருத்தத்தில் இருந்த விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள சேமலை பாளை யத்தை சேர்ந்தவர் கதிரே சன் (37). இவர் அரச்சலூர் அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியில் தறிப்பட்டறை ஒன்றை லீசுக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    இவர் வங்கி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் பெற்று தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லாததால் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாதவும் கூறப்படுகிறது.

    இதனால் அவரால் கடன் கட்ட முடியவில்லை. தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் கதிரேசன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கதிரேசன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்டு அவரது மனைவி கவிதா அவரிடம் விசாரித்தார். அப்போது கதிரேசன் எலி மருந்தை (விஷம்) தின்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மீட்டு பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×