search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker commits suicide"

    • மது போதைக்கு அடிமையான தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் இளைஞர் படிப்பகம் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). நெசவு தொழிலாளி. இவரது மனைவி புஷ்பம். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார். நேற்று இரவு வழக்கம் போல் தனது அறைக்கு படுக்க சென்றார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

    இதனையடுத்து இன்று காலை அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மனைவி புஷ்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார்

    ஈரோடு,

    ஈரோடு, கள்ளுக்கடைமேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கள்ளுக்கடை–மேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார்.
    • மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீல்வாணி வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து(58). கூலி தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    தங்கமுத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமுத்து வாந்தி எடுத்து உள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது தான் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவி உடன் கணவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்கமுத்து அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமுத்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.

    தேனி:

    சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் அடுத்துள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது.

    குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மணிமேகலை ஆண்டிப்பட்டி பூக்காரத் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று அங்கு வந்த கண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகளும், மகனும் இறந்த சோகத்தில குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் மைனர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 43). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லலிதா (41). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகனும், அனிதா (17) என்ற மகளும் இருந்தனர்.

    மகேந்திரன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒரே மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் மேலும் ஒரு பேரிடி விழுந்தது. அனிதாவும் உடல் நலக்குறைவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகனும் மகளும் இறந்து விட்ட சோகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமகிருஷ்ணன் தனது மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் எஸ்.எஸ்.ஐ. கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர்.
    • முத்துசாமி திடீரென குளியலறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.

    கோவை:

    கோவை மலுமிச்சம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 33). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரோஜா (29).

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர்.பின்னர் முத்துசாமி, அஸ்வினி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இருவரும் மலுமிச்சம்பட்டியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். முத்துசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி 2-வது மனைவியிடமும் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று முத்துசாமி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த முத்துசாமி திடீரென குளியலறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.வெகு நேரமாக முத்துசாமி குளியலறையில் இருந்து வெளியே வராததால் அஸ்வினி சந்தேகம் அடைந்தார்.

    அவர் குளியலறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்தார்.அப்போது முத்துசாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    பின்னர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் இருந்து ேகாவைக்கு கள்ளக்காதலியை கடத்தி வந்தார்
    • கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனம் உடைந்தார்

    கோவை:

    மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முரளி (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு சூரியகலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

    திருமணமான 6 வருடங்களுக்கு பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.

    அதன் பின்னர் முரளிக்கு நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் 8 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

    அதன் பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நிஷா முரளியை பிரிந்து சென்றார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முரளிக்கு திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண்ணின் வீட்டிற்கு செல்லும் முரளி அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணி ன் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இது குறித்து இளம்பெண் தனது கள்ளக்காதலன் முரளியிடம் கூறினார். எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர். பின்னர் கணவன்-மனைவி என கூறி துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தில் வீட்டு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்தநிலையில் இளம்பெண்ணின் கணவர் தனது மனைவியை காணவில்லை என மதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர். இளம்பெண் கோவையில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

    தனது கள்ளக்காதலி அவரது கணவருடன் சென்றதால் முரளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×