என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் கட்டிட தொழிலாளி தற்கொலை
- கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர்.
- முத்துசாமி திடீரென குளியலறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 33). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரோஜா (29).
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர்.பின்னர் முத்துசாமி, அஸ்வினி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் மலுமிச்சம்பட்டியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். முத்துசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அடிக்கடி 2-வது மனைவியிடமும் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று முத்துசாமி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த முத்துசாமி திடீரென குளியலறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார்.வெகு நேரமாக முத்துசாமி குளியலறையில் இருந்து வெளியே வராததால் அஸ்வினி சந்தேகம் அடைந்தார்.
அவர் குளியலறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து பார்த்தார்.அப்போது முத்துசாமி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்