search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
    X

    கோப்பு படம்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

    குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.

    தேனி:

    சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் அடுத்துள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது.

    குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மணிமேகலை ஆண்டிப்பட்டி பூக்காரத் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று அங்கு வந்த கண்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×