search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூரில் மகள் இறந்த துக்கத்தில் டெய்லர் தற்கொலை
    X

    ராமகிருஷ்ணன்

    வேடசந்தூரில் மகள் இறந்த துக்கத்தில் டெய்லர் தற்கொலை

    • மகளும், மகனும் இறந்த சோகத்தில குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் மைனர் காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 43). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி லலிதா (41). இவர்களுக்கு மகேந்திரன் என்ற மகனும், அனிதா (17) என்ற மகளும் இருந்தனர்.

    மகேந்திரன் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒரே மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் மேலும் ஒரு பேரிடி விழுந்தது. அனிதாவும் உடல் நலக்குறைவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகனும் மகளும் இறந்து விட்ட சோகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமகிருஷ்ணன் தனது மகளின் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் எஸ்.எஸ்.ஐ. கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×