search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை

    • புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்.
    • சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்

    புதுச்சேரி:

    வைத்திக்குப்பத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். மீனவர். இவரது மனைவி சுமதி (வயது45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக சுமதி மனநிலை பாதிக்கப்பட்டு அந்த வழியாக செல்பவர்களை திட்டுவது, தூக்கத்தில் சத்தம் போடுவது, சில நாட்களில் தூங்காமல் இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் சுமதி வீட்டில் மருந்து-மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதியின் தம்பி சத்யராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதுமுதல் சுமதியும் தற்கொலை செய்துகொள்ள போவதாக அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி வருவார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த வேலையில் சுமதி மனநோய்க்கு வைத்திருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது கணவர் குமார் கொடுத்த புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×