search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இளம் பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    இளம் பெண் தற்கொலை

    • சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.
    • வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    சேதராப்பட்டு அருகே வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம் பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.

    சேதராப்பட்டு அருகே துத்திப்பட்டு கல்லறை வீதியை சேர்ந்தவர் தாஸ். கூலித்தொழிலாளி இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் பரமேஸ்வரி (வயது 24). சம்பத்தன்று வீட்டு வேலை செய்ய வில்லை என பரமேஸ்வரியை அவரது தாயார் வசந்தா கண்டித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவருத்தில் இருந்த பரமேஸ்வரி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பரமேஸ்வரியை அவரது பெற்றோர் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் பரமேஸ்வரியை அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது உறவினர் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாகள்.

    Next Story
    ×