search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kills two wives"

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மனநோயாளி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தடாகிசோலா கிராமத்தை சேர்ந்தவர் ஷியாமா பட்டி. உறவுக்கார பெண்களான அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்துகொண்டு இரு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த இவர் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு ஷியாமா பட்டி இன்று பிணமாக தொங்கினார். இதைக்கண்ட கிராம மக்கள் சடார் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர்.

    விரைந்துவந்த போலீசார் ஷியாமா பட்டியின் பிரேதத்தை தூக்கில் இருந்து இறக்கி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த வேளையில், ஷியாமா பட்டியின் வீட்டினுள் அவரது மனைவிகள் இருவரும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    அங்கு கிடந்த ரத்தம் தோய்ந்த சுத்தியலை கண்டெடுத்த போலீசார், மனநோயாளி ஷியாமா பட்டி தனது இரு மனைவிகளை சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×