என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "son"
- கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:
சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். 55 வயதான இவர் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவரது மனைவி யமுனா. 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். சாய் சுவாதி 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யு.கே.ஜி. படித்து வந்தான்.
மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மோகன் குழந்தைகளோடு வீட்டில் இருந்தார். மனைவி யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு
உள்ளது. இதனை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் யமுனா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், வேறு ஒருவருடனான தொடர்பை மனைவி கைவிட மறுக்கிறாளே என்கிற வேதனையில் இருந்தார்.
இதை தொடர்ந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மனதை கல்லாக்கிய மோகன் மகள் சாய் சுவாதியின் கழுத்தை அறுத்தார். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானாள்.
இதைத் தொடர்ந்து தனது 5 வயது மகன் தேஜசையும், மோகன் ஈவு இரக்கமின்றி கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
வேலை முடிந்து யமுனா மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியில் இருந்து கணவர் மற்றும் குழந்தைகளை யமுனா கூப்பிட்டு பார்த்தார். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அங்கே அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் தூக்கில் தொடங்கியதையும், குழந்தைகள் இறந்து கிடப்பதையும் பார்த்து யமுனா கதறி அழுதார். இதுபற்றி குமரன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அமுதா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்களும் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் யமுனாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மோகனுக்கும் யமுனாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றுள்ளது. முதலில் பெண் குழந்தை பிறந்த பின்னர் 2-வதாக 8 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகள் மீதும் மோகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். மனைவி யமுனாவின் தவறான தொடர்பால் மனமுடைந்த அவர் பின்னர் குழந்தைகளுக்காகவே வாழ தொடங்கியுள்ளார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.
பின்னர் மோகன், மனைவியோடு வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 2 மாதங்களாக மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்துள்ளனர். இதன் பிறகும் யமுனா கள்ளக் காதலை கைவிடாததால் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள மோகன் முடிவு செய்தார். மனைவி தவறான பழக்கத்தில் இருப்பதால் குழந்தைகள் அனாதையாகி விடுமோ என அஞ்சியே அவர்களை கொன்றுள்ளார்.
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் நிலையில் அங்கு யமுனாவின் வீட்டாரும், மோகனின் வீட்டாரும் குவிந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர். இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
- கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார்.
- ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (76). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு பாலாஜி என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு விபத்தில் ரகுநாதனின் மனைவி இறந்து போனார். அவரை மகன் பாலாஜி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரகுநாதனின் மனைவி பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள், ஆவணங்கள் வங்கி லாக்கரில் இருந்தது. சொத்துக்கள் மற்றும் பணத்தை பறித்த பாலாஜி தனது தந்தை ரகுநாதனை இரக்கமின்றி வீட்டை விட்டு வெளியே விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த ரகுநாதன் திருவள்ளூர் வீரராகவர் கோவில் முன்பு உணவின்றி, பிச்சையெடுத்து அங்கேயே ஒரு வாரமாக தங்கி இருந்தார்.
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
என் உழைப்பில் வந்த வீடு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை எனது மகன் பாலாஜியும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினரும் திட்டமிட்டு பறித்து என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். என்னை பசி பட்டினியால் கொடுமை செய்து கொல்லவும் துணிந்து விட்டார்கள்.
அவர்களால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என் சொத்தையும் எனது மனைவியின் நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடம் இருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும்.
இதற்கு உடந்தையாக இருக்கும் மகனின் மனைவி, மாமனார், மைத்துனர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது.
- டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்து விட்டார். காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இதுவரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.
தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.
இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
- திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.
ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
- வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியை சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை யாளர் செல்வராஜ் (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (43). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள். இவர்கள் இருவரது வீடும் அருகருகே உள்ளது.
இந்நிலையில் முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிலத்தை முருகன் பணத்தை ெகாடுத்து திரும்ப பெறாத நிலையில் கடந்த 26-ந் தேதியன்று அந்த நிலத்தை செல்வராஜ் தனது பெயருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த முருகன் செல்வராஜிடம் சென்று நிலத்தை தனக்கு திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதற்கு செல்வராஜ் மறுப்பு தெரிவித்த நிலையில் செல்வராஜுக்கும் முருகனுக்கும் முன்பகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (69) என்பவரை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்கு சென்றார்.
அவர்களுக்கு தெரியாமல் முருகன் தனது காரில் செல்வராஜை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
வங்கியில் வேலை முடிந்து செல்வராஜூம், கந்தசாமியும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் கலர்பட்டி மாலங்காட்டான் தெரு அருகே உள்ள மோரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது முருகன் தனது காரை செல்வராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி செல்வராஜூம், கந்தசாமியும் கீழே விழுந்தனர். அப்போது முருகன் தான் காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வராஜ், கந்தசாமி ஆகியோரை சரிமாரியாக வெட்டினார். முருகனின் 16 வயது மகனும் அவர்களை கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த செல்வராஜையும், கந்தசாமியையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். செல்வராஜ் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையிலும், கந்தசாமி சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார் சம்பந்தப்பட்ட முருகன் மற்றும் அவரது மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான முருகனின் மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.
- சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார்.
- குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.
கடலூர்:
சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 55). இவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மதுப்பிரியரான குமரவேல், குடித்துவிட்டு வீட்டில் உணவருந்தினார். அப்போது மருமகள் நிஷாவிடம் மீன் குழம்பு நன்றாக இல்லை, இதைக் கூட சரியாக சமைக்க தெரியாதா என கேட்டு திட்டியுள்ளார். இதனை தனது கணவர் வந்தவுடன் நிஷா (21) நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகணேஷ் (24) தனது தந்தை குமரவேலை கீழே தள்ளி கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்தகாயம் அடைந்த குமரவேல், சிதம்பரம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்க ப்பட்டார். மேல் சிகிச்சை க்காக தஞ்சாவூர் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரவேலுவின் மனைவி சித்ரா (50), சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜெய்கணேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
- ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
- மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,
இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார்.
- பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர் போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.
- 2-வது திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி தாயை மகன் கத்தியால் குத்தினார்.
- மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகே பந்தநேந்தலை சேர்ந்தவர் தவமணி. இவரது மனைவி லட்சுமி(வயது55). இவர்க ளுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருணமாகி 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
2 வருடங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே சீதாலட்சுமி பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் குழந்தைகள் கார்த்திக்கின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2-வது திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார். சம்பவத்தன்று தாயிடம் இதுகுறித்து பேசியுள்ளார். அப்போது பெண் பார்ப்ப தாக தாய் கூறியுள்ளார். ஆனால் உடனடியாக பெண் பார்க்க வேண்டும் என கார்த்திக் வற்புறுத்தி உள்ளார். அப்ேபாது பொறுமையாக இருக்குமாறு தாய் கூறியுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயை குத்தினார்.
அதை பார்த்து தடுக்க வந்த தந்தையையும் தாக்கி விட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த லட்சுமி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.
- இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோ்த்துள்ளாா்.
- மகனை அரசு பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
அவினாசி
திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவா் வடிவேல் (வயது40). இவா் தனது மகன் நிஷாந்த் சக்தியை 1, 2ம் வகுப்புகளை கோவை மாவட்டம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,3 முதல் 5ம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளியிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஈரோடு குமலன்குட்டை அரசு உயா்நிலைப்பள்ளியிலும் படிக்கவைத்துள்ளாா்.இதைத்தொடா்ந்து இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சோ்த்துள்ளாா். தொடா்ந்து தனது மகனை அரசுப் பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்