என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Reels"
- சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
- டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
VIDEO | Delhi Police arrested a person after his reel went viral on social media. In the video, the person can be seen sitting on a chair in the middle of the road along with his motorcycle.
— Press Trust of India (@PTI_News) April 27, 2024
(Source: Third Party/PTI)
(Full video available on PTI Videos -… pic.twitter.com/WfN95iYciT
- ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது
- விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார்.
அட்லி தமிழ் திரை உலகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பெயர் இன்று இந்திய திரை உலகமே உச்சரிக்கும் பெயராக உயர்ந்து நிற்கிறது.
ரஜினி நடித்த எந்திரன், விஜய் நடித்த நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த படங்களுக்கு கிடைத்த வெற்றியை அடுத்து அட்லியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்தது. இந்த நிலையில் பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அட்லி இந்தி திரை உலகில் தடம் பதித்தார்.
ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் சர்வதேச அளவில் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜவானுக்காக பல புகழையும் பல விருதுகளையும் அட்லீக்கு பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மும்பையில் அலுவலகம் தொடங்கியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தை இந்தி மொழியில் நடிகரான வருண் தவான் வைத்து ரீமேக் செய்துவருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராஜ்பால் யாதவ், வமிக்கா கபி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
அடுத்ததாக ஹாலிவுட் படங்களை அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என் வெற்றிக்கு முக்கிய காரணமே எனது மனைவி பிரியாதான் என பல மேடைகளில் பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் கொண்ட அட்லியும், பிரியாவும் விதவிதமான ஸ்டைலில் உடைகளில் 'போட்டோ சூட்' எடுத்து சமீப காலமாக வெளியிட்டு வருகின்றனர்.
அதில் அவரது மனைவியான பிரியா இன்று அவரது குழந்தையை தூக்கி கொஞ்சிய படியே வாரிசு படத்தை பார்ப்பதுப்போல் இருக்கும் வீடியோவை அட்லி அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.
- வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
பூந்தமல்லி:
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள் பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கருமாரி அம்மன் படத்திற்கு கீழே நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் ரீல்ஸ் போல வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சிக்கு நடித்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் வேடிக்கை பார்த்ததை கூட அவர்கள் பொருட்படுத்தாமல், நடிகர் வடிவேலு, கோவிலில் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்வதுபோல் வசனம் பேசி கோவில் பணியாளர்கள் நடித்தனர்.
மேலும் அதே கோவில் வளாகத்தில் மற்றொரு வீடியோவில் 'இது போல சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்' என்ற பாடலுக்கு கோவில் பணியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் கருவறை அருகே இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளனர்.
இந்த 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பக்தர்கள் புனிதமாக கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இதுபோன்ற அநாகரிகமாக நடந்து கொண்ட இவர்கள் மீது அறநிலையத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
- இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
- வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
புதுடெல்லியின் பஸ்சின் விஹார் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் டாக்கா. இவர் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள மேம்பாலம் அருகில் சென்ற போது திடீரென காரை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், மேம்பாலத்தில் அவர் கார் கதவை திறந்த நிலையில் ஓட்டி செல்வதும், ரீல்ஸ் வீடியோவுக்காக சாகசம் செய்யும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக அவருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது அவர் காவல்துறையினரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் சில பிரிவுகளில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர் பயன்படுத்திய காரையும், அதில் இருந்த சில பிளாஸ்டிக் ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
रील बनाने के लिए विभिन्न यातायात प्रावधानों का उल्लंघन करने वाले आरोपी के विरुद्ध #दिल्लीपुलिस ने मोटर वाहन अधिनियम के अंतर्गत सख्त कार्यवाही करते हुए चालान कर वाहन ज़ब्त किया और पुलिसकर्मियों से अभद्रता एवं उनपर हमला करने पर आईपीसी की धाराओं में केस दर्ज कर गिरफ्तार किया। pic.twitter.com/2f5VBJrwtS
— Delhi Police (@DelhiPolice) March 30, 2024
- செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.
அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா (வயது 23).
யூ-டியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் தயாரித்து பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவிப்பதற்காக சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அதன்மூலம் லட்சங்களை சம்பாதித்து வருகிறார். இவருக்கு யூ-டியூபில் 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இவர் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவை குளத்தின் அருகே உள்ள முத்துலிங்கம் (75) என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், தற்போது மழை வெள்ளத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் மோகத்தில் அப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் சென்று ஒரு கட்டிடத்தின் மேலே நின்று கீழே நண்பர்களை நிற்க வைத்து, குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல சாகச வீடியோ பதிவிட்டு அதை யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
அதில் அருகில் நின்ற நண்பர்கள் மீது இந்த தீ பரவுகிறது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரது சமூக வலைதள பக்கங்களில் தேரிக்காட்டில் மண்ணுக்குள் தலைகீழாக புதைந்து நின்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் வீடியோக்கள் என பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் பல லட்சம் பயனர்களால் பார்க்கப்பட்டு போலீசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை தேடிப்பிடித்து விசாரணை நடத்தி ரஞ்சித் பாலா, சிவக்குமார், இசக்கி ராஜா ஆகிய 3 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 277-தண்ணீரை மாசுபடுத்துதல், 278-சுற்றுச்சூழலை மாசுபடுத்துதல், 430-நீர்ப்பாசன பணிகளில் காயம் ஏற்படுத்துதல், 285-பிற நபருக்கு காயம் ஏற்படுத்துதல், 308-மரணத்தை விளைவிக்கும் என தெரிந்தே முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யூ-டியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
- ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மதுரை:
இன்றை நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். அதிக பார்வையாளர்கள் தங்கள் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சிலர் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்களை செய்து அதனை இணையத்தில் பதிவிடுகின்றனர்.
ரெயில் செல்லும்போது தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுப்பது, மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வீலிங் செய்வது உள்ளிட்ட வரம்பு மீறிய செயல்களால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலையில் வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் மோகத்தால் ஆற்றில் பெட்ரோலை ஊற்றி எரித்து அதில் குதிப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆற்றுப்பகுதிக்கு செல்லும் 4 வாலிபர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஆற்றுக்குள் பெட்ரோலை வட்டமாக ஊற்றுகின்றனர். பின்னர் அதில் ஒரு வாலிபர் தீக்குச்சியை கொளுத்தி அதில்போட வட்ட வடிவில் தீ குபீரென்று எரிய தொடங்கியது.
அந்த நேரத்தில் அருகில் இருந்த சுவற்றில் ஏறியிருந்த வாலிபர் ஒருவர் அந்த தீயில் குதிக்கிறார். சிறிது நேரத்தில் தீ அணைந்து விட அந்த வாலிபர் தண்ணீரில் இருந்து வெளியேறுகிறார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயல்களால் நீர்நிலைகளுக்கும் அதில் வாழும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.
ஆபத்தான முறையில் பெட்ரோலை ஊற்றி இதுபோன்ற சாகச செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு பலர் இணையத்தில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சிலருக்கு தவறான முன்னுதாரணமாகி விடும். எனவே சம்பந்தப்பட்டவர்களை போலீசார் உடனே கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- கண்காட்சியில் இடம்பெற்று இருந்த கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
- தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.
புதுடெல்லி:
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதி பொதுத்தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும், பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு முதல் தேர்வும், தெளிவும் என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி வருகிறார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதுவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடியும் மாணவர்களிடம் பயமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 2 கோடியே 56 லட்சம் மாணவர்கள் மற்றும் 5.60 லட்சம் ஆசிரியர்கள் 1.95 லட்சம் பெற்றோர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரதமர் மோடி கலந்து கெரண்டார், அவரை மாணவ-மாணவிகள் பாடல்கள் பாடி வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி அங்கு மாணவர்கள் அமைத்து இருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
கண்காட்சியில் இடம்பெற்று இருந்த கண்டுபிடிப்புகளின் செயல் விளக்கத்தை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து பாரத் மண்டபத்தில் திரண்டு இருந்த 3 ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவரிடம் மாணவ-மாணவிகள் தேர்வு சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி சளைக்காமல் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவர்கள் முன்பு எப்போதையும் விட புதுமையாக மாறி உள்ளனர். நமது மாணவர்கள் நமது எதிர்காலத்தை வடிவமைப்பார்கள். இங்கு இடம்பெற்று இருந்த கண்காட்சியில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்து இருந்தனர். அவர்களுக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த பாரத் மண்டபம் வரலாற்று சிறப்புமிக்கது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இந்த மண்டபத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்த மண்டபத்தில் தற்போது மாணவர்களாகிய நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சி எனக்கும் ஒரு தேர்வு மாதிரி தான். மாணவர்கள் எந்த பதற்றத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக வேண்டாம். தேர்வு எழுதும் மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள். தேர்வு தொடங்குவதற்கு முன்பு பதற்றப்படாமல் நிதானமாக செல்லுங்கள். இதற்காக கொஞ்சநேரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.
தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்ள எழுத்து பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். இந்த பயிற்சி உங்களிடம் நம்பிக்கையை கொடுக்கும். திறமையை அதிகரிக்கும்.
நண்பர்களை என்றைக்கும் எதிரிகளாக பார்க்காதீர்கள். வாழ்க்கையில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மற்றவர்களுடன் போட்டியிடாமல் தங்களிடம் போட்டியிட வேண்டும். நெருக்கடியை கையாளும் கலையை மாணவர்கள் அவசரமின்றி படிப்படியாக கற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மனதிடம் அவசியம். அதற்கேற்றாற் போல உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் நம் திறமையை பாதிக்கும். முடிவு எடுப்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் உடல்நலனுக்கு முக்கியத்தும் கொடுங்கள்.
செல்போனில் ரீல்ஸ் போன்ற வீடியோக்களை அதிகம் பார்க்காதீர்கள். இரவில் நன்றாக தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறிய இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக உங்கள் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியை நீங்கள் கடைபிடித்தால் தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடுவீர்கள்.
மாணவர்களை போல பெற்றோர்களும் பரீட்சை சமயத்தில் மனஅழுத்தத்தை சந்தித்து வருகிறார்கள்.தயவு செய்து உங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள்.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டுகளை தங்கள் சொந்த விசிட்டிங் கார்டு போல கருதுகிறார்கள். இது நல்லது கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
#WATCH दिल्ली: प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, "...ये शिक्षक और माता-पिता के लिए सोचने का विषय है कि ऐसा क्या कारण है कि हम पारिवारिक जीवन में भी विश्वास की कमी का अनुभव कर रहे हैं... ये विश्वास की कमी अचानक नहीं होता है। एक लंबे कालखंड से गुजरकर निकलती है। इसलिए हर माता-पिता,… pic.twitter.com/CCgGrUAry4
— ANI_HindiNews (@AHindinews) January 29, 2024
- கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
- தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (35) . இவரது மனைவி தீபிகா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
தீபிகா மேலுகோடு என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் தீபிகா நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவரது வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தொடர்ப்பு கொள்ள முயன்றனர்.
ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தீபிகா மாயமானதாக மேலுகோட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதற்கிடையே மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் பாதி அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் விரைந்து வந்து பிணமாக கிடந்தது தீபிகா தான் என்பதை உறுதி செய்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்து புதைத்தது யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.
தீபிகா ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்ததால், அதன்மூலம் பழக்கமானவர்கள் யாராவது கொலை செய்தனரா என்ற, கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது தீபிகா உடல் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று ஒரு பெண்ணும் ஒரு வாலிபரும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததும் அதை கோவிலுக்கு வந்த சிலர் வீடியோ எடுத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கொலை செய்யப்பட்ட ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. அவரிடம் ஒரு வாலிபர் கடுமையாக சண்டை போடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. எனவே அந்த வாலிபர்தான் தீபிகாவை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் தீபிகாவுடன் சண்டை போட்ட அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் (22), என்பது தெரிந்தது. ஏற்கனவே தீபிகாவின் குடும்பத்தினரும், நிதிஷ் மீது கொலை குற்றச்சாட்டு கூறி இருந்தனர். கடைசியாக அவர் தான், தீபிகாவிடம் மொபைல் போனில் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நிதிஷை தேடி வந்தனர். அப்போது விஜயநகரா ஹொஸ்பேட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் நிதிஷை, மேலுகோட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முதலில் தீபிகாவை கொலை செய்யவில்லை என்று கூறியவர், பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-
தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதாலும், தீபிகாவின் ரீல்ஸ் வீடியோ மூலமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது தவறான உறவு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகித்து உள்ளனர். இதனால் நிதிஷுடன் பேசுவதைத் தவிர்க்கும்படி, தீபிகாவுக்கு குடும்பத்தினர் அறிவுரை கூறினர். இதனால் நிதிஷுடன் பேசுவதை தீபிகா தவிர்த்தார். ஆனால் தன்னுடன் பேசும்படி, நிதிஷ் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தீபிகாவை கொலை செய்ய நிதிஷ் முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 20-ந்தேதி நிதிஷுக்கு பிறந்தநாள். இதையடுத்து அவர் தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சர்ட் எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க தீபிகா யோக நரசிம்ம சுவாமி கோவில் மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து நிதிஷுக்கும், தீபிகாவுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார்.
தீபிகாவை காணவில்லை என்று கணவரும், பெற்றோரும் தேடியபோது, தீபிகாவின் தந்தைக்கு, நிதிஷ் அடிக்கடி போன் செய்து, அக்கா வந்து விட்டாரா?' என்று கேட்டு நாடகம் ஆடியதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- கவுரி விர்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
- போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.
சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சில இளைஞர்களும், இளம்பெண்களும் வித்தியாசமான வீடியோக்களையும், சாகசங்களையும் செய்து ரீல் வீடியோக்கள் எடுத்து பதிவிட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. அவற்றில் சில ஆபத்தானவையாக இருக்கிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஹோசியர்புர் மாவட்டத்தை சேர்ந்த கவுரி விர்டி என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமல் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவராக திகழ்கிறார். இவரது இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான பாலோயர்களை கொண்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரின் பானட் மீது அமர்ந்து செல்வது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.
சில மணி நேரங்களிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வைரலான இந்த வீடியோ ஜலந்தர்-ஜம்மு சாலையில் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தின் பதிவு எண் மூலம் கவுரியை அடையாளம் கண்டு அவரது காரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் ரீல் வீடியோவுக்காக இந்த செயலில் ஈடுபட்டதாக கூறினார். அவருக்கு எச்சரிக்கை செய்த போலீசார் இதுதொடர்பான விளக்கத்தையும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்