search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"

    • பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்
    • பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அமன் என்கிற 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர். 

    • செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
    • பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.

    அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது. 

    என் கணவரும், அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள்தான் பிறந்தது. இதனால் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர்.

    நான் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறேன். ஆனாலும் பலமுறை என்னை பட்டினி போட்டுள்ளனர்.

    இவ்வாறு அந்த பெண் கூறினார்.

    தற்போது படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×