search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்
    X

    சாமியார் பேச்சை கேட்டு பெற்ற மகளை பட்டினி போட்டு கொன்று புதைத்த பெற்றோர்

    சாமியார் பேச்சை கேட்டு மாற்றுத்திறனாளி மகளை கொன்று தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த பெற்றோர் அடுத்த குழந்தை நன்றாக பிறக்கும் என காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.

    இதனை அடுத்து, சாமியார் ஒருவர் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என ஆனந்தாபாலிடம் கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை கேட்டு, 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் தனது மகளை ஆனந்தாபால், அவரது மனைவி கொன்றுள்ளனர்.

    இதனை அடுத்து, தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி மகளின் சடலத்தை புதைத்துள்ளனர். தற்போது, போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய உள்ளனர். 
    Next Story
    ×