என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உத்தரப்பிரதேசம்
நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"
- செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
- பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.
அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி ஆண் குழந்தையை பெற்றுத் தராததால் அவரை அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் பெண் கெஞ்சுகிறார். இருப்பினும் கணவரும், அவரது குடும்பத்தினரும் பெண்ணை உதைத்து தள்ளுகின்றனர். அவரை சராமரியாக குத்துகின்றனர். அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடுவதாக இல்லை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த போலீசாரிடம் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது.
என் கணவரும், அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். ஆனால் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள்தான் பிறந்தது. இதனால் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மன ரீதியாகவும் தொந்தரவு கொடுத்தனர்.
நான் கூலித்தொழிலாளியாக பணியாற்றுகிறேன். ஆனாலும் பலமுறை என்னை பட்டினி போட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த பெண் கூறினார்.
தற்போது படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கணவர் உள்ளிட்ட குடும்பதினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
லக்னோ:
உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.
அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
வரும் பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 74 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். #AmitShah
லக்னோ:
2019 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மத்தியிலுள்ள பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியை நிர்ணயம் செய்வதில் முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளது. 2014 தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றியை தனதாக்கியது.
உ.பி.யில் பெரிய கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கிடையே, காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். எனவே, பா.ஜ.க.விற்கு இந்த முறை கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உ.பி.யில் பா.ஜ.க.வின் வாக்குச்சாவடி அளவிலான பணியாளர்களிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். அப்போது பேசிய அமித் ஷா, உ.பி.யில் 74 பாராளுமன்ற தொகுதிகளை பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மாநிலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீதம் பா.ஜ.க.வுக்கு வரும் வகையில் தீவிரமாக கட்சி பணியாற்ற வேண்டும்.
மாயாவதி பலவீனமான அரசு வேண்டும் என்கிறார், அது ஊழலுக்குதான் வழிவகை செய்யும். நாங்கள் வலுவான அரசை அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியால் மட்டுமே வலுவான அரசை கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தலைவரால் ஆட்சி செய்யப்படுவதை விரும்பவில்லை.
2014 தேர்தலில் உ.பி.யில் இருந்து 73 தொகுதிகள் கிடைத்ததால் மோடியால் மெஜாரிட்டி அரசு அமைக்க முடிந்தது என கூறப்பட்டது. இப்போது மாநிலத்தில் 74 தொகுதிகளில் கட்சியை வெற்றிபெற செய்ய பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தனதாக்கிவிட்டால். மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ ஆட்சிக்கு வரமுடியாது. அடுத்த 25 வருடங்களுக்கு பா.ஜ.க. தான் ஆட்சி செய்யும்.
கடுமையான உழைப்பாளியான மோடிக்கு இந்த முறை தேடித்தரும் வெற்றி நம் அர்சியல் எதிர்களின் இதயத்துடிப்பை நிறுத்துமாறு அமைவதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். #AmitShah
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர். #Accident
லக்னோ :
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். #Accident
உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மதரிபூர் எனும் கிராமத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில், 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர் மற்றும் 35 பேர் மோசமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த 35 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனவும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். #Accident
பாஜகவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாவின் மரணத்தில் 50 ஆண்டுகளாக உள்ள மர்மத்தை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. #BJP #DeendayalUpadhyaya
லக்னோ:
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாரதீய ஜன சங்கத்தை தொடங்கும் போது அவருடன் இணைந்து தலைமை பொறுப்பாற்றியவர் தீனதயாள் உபாத்தியா. பண்டிட்ஜி என அக்கட்சியினரால் அழைக்கப்படும் அவர் கடந்த 1968-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் முஹல்சராய் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கொல்லப்பட்டரா? விபத்தா? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு பாஜக உறுப்பினர் ராகேஷ் குப்தா, மத்திய உள்துறைக்கு எழுதிய கடிதத்தில், உபாத்தியா மரணம் தொடர்பாக புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். உபாத்தியா மரணத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் இருந்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ரெயில்வே ஐஜி அளித்த அறிக்கையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டது. எனினும், காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில் “வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் இருவரை கோர்ட் விடுதலை செய்து விட்டது எனவும், பாரத் ராம் என்ற ஒருவருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இருந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாரத் ராம் தண்டிக்கப்பட்டது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் என்பதால் உபாத்யா மரணத்திற்கு பாரத் காரணமாக இருப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குழப்பங்களை எல்லாம் தவிர்க்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உபாத்தியா சடலமாக கண்டெடுக்கப்பட்ட முஹல்சராய் நகரம் தற்போது தீனதயாள் உபாத்தியா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேரை போலீசார் என்கவுண்டர் செய்வதற்கு முன், பத்திரிகையாளர்களை வர வழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். #AligarhEncounter
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இவர்கள் 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களை விரட்டி சென்ற போது அலிகாரில் உள்ள பழைய கட்டிடத்தில் மறைந்து கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் மறைந்து இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்தனர்.
முன்னதாக சம்பவ இடத்திற்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து துப்பாக்கிச்சண்டையை படம் பிடித்து கொள்ளவும் அனுமதி வழங்கினர்.
யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பு ஏற்தில் இருந்து மாநிலத்தில் உள்ள 60க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரும்பு அதிகளவில் உற்பத்தி செய்வது ஒருவகையில் சர்க்கரை நோய்க்கு காரணமாக இருப்பதால், விவசாயிகள் வேறு பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். #YogiAdityanath
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது நீங்கள் (விவசாயிகள்) அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர். கரும்பு ஒன்றை மட்டுமே பயிரிடும் விவசாயிகள் காய்கறிகள் போன்ற மாற்று பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவிலான கரும்பு உற்பத்தி செய்யும் போது, அது அதிக கொள்முதலுக்கு வழிவகை செய்கிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணம்” என கூறினார்.
மேலும், கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் வழங்கப்படும் எனவும் யோகி தனது பேச்சில் கூறினார். சமீபத்திலும், குரங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் அனுமன் மந்திரம் தினமும் கூறினால் குரங்கு தொல்லை இருக்காது என யோகி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி, மனைவியுடனான சண்டை காரணமாகவே விஷம் குடித்ததுள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது உடல்நிலை தேறியுள்ளார். கிருஷ்ண ஜெயந்தி அன்று மனைவி அசைவ பீட்சா ஆர்டர் செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாஸ் பேசிய போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உறவினர்கள் வந்து ஒன்று சேர்த்து வைத்தாலும், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததால் மனம் உடைந்த தாஸ் விஷம் குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சூர்ய குமார் சுக்லா, 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஊர்க்காவல்படை டிஜிபி ஆக இருப்பவர் சூர்ய குமார் சுக்லா. சில மாதங்களுக்கு முன்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என அவர் கூட்டம் ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெற இருக்கும் சுக்லாவுக்கு பணி நீட்டிப்பு கொடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சுக்லா எழுதியுள்ள கடிதத்தில், “பணி ஓய்வுக்கு பின்னர் கிடைக்கும் பென்சன் எனது குடும்பத்துக்கு போதுமானதாக இருக்கும். அடுத்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்காக பிரசாரம் செய்ய விருப்பப்படுகிறேன். எனவே, மாநில அரசில் காலியாக இருக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் போன்ற பதவிகளில் என்னை நியமிக்க வேண்டும். நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன்” என கூறியுள்ளார்.
ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் ஓ.பி.சவுத்தரி, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நடக்க உள்ள அம்மாநில சட்டசபை தேர்தலில் அவர் அக்கட்சி சார்பில் போட்டியிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாமியார் பேச்சை கேட்டு மாற்றுத்திறனாளி மகளை கொன்று தனது வீட்டிலேயே குழி தோண்டி புதைத்த பெற்றோர் அடுத்த குழந்தை நன்றாக பிறக்கும் என காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள சௌதார்புர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தாபால் என்பவர் தனது குழந்தையை கொன்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனந்தாபாலுக்கு 6 வயதில் தாரா என்ற மகள் இருந்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தாராவின் உடல்நிலை மருத்துவ சிகிச்சையில் முன்னேறவில்லை.
இதனை அடுத்து, சாமியார் ஒருவர் மகளை கொன்று விட்டால், அடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என ஆனந்தாபாலிடம் கூறியுள்ளார். சாமியாரின் பேச்சை கேட்டு, 5 நாட்களாக உணவு, குடிநீர் எதுவும் கொடுக்காமல் தனது மகளை ஆனந்தாபால், அவரது மனைவி கொன்றுள்ளனர்.
இதனை அடுத்து, தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி மகளின் சடலத்தை புதைத்துள்ளனர். தற்போது, போலீசார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் ஆனந்தாபால், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X