என் மலர்
செய்திகள்

மனைவி உடன் தகராறு காரணமாக எலிமருந்து சாப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் 4 நாட்களுக்கு முன் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சுரேந்திர குமார் தாஸ் சிகிச்சை பலனின்றி பலியானார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்து வருகிறார் சுரேந்திர குமார் தாஸ். லக்னோவை பூர்விகமாக கொண்டரான தாஸின் மனைவி மருத்துவராக இருக்கிறார். காவல்துறை வட்டாரத்தில் சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவரான இவர் கடந்த புதன் கிழமை காலை தனது இல்லத்தில் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் எலிமருந்து சாப்பிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Next Story